கணியூர் ஊராட்சி
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கணியூர் ஊராட்சி (Kaniyur Gram Panchayat), தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 8281 ஆகும். இவர்களில் பெண்கள் 3877 பேரும் ஆண்கள் 4404 பேரும் உள்ளனர்.
ஊராட்சியாக இருந்த இந்த உள்ளாட்சி அமைப்பு 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் பேரூராட்சியாக தரம் உயர்த்தபட்டது.[7][8]
Remove ads
அடிப்படை வசதிகள்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]
Remove ads
சிற்றூர்கள்
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[9]:
- கணியூர்(இந்திரா நகர்)
- கொள்ளுபாளையம்
- குமார் நகர்
- ஊஞ்சபாளையம்
- ஊஞ்சபாளையம்(இந்திராநகர் )
- பொன்னான்டாம்பாளையம்
- புதுப்பாளையம்
- சேடர்பாளையம் (இந்திரா நகர்)
- கணியூர்
- செல்லப்பம்பாளையம்
- செங்கோதிபாளையம்
- தண்ணீர்பந்தல்
- தட்டாம் புதூர்
- எல்லக்காடு
சமீபத்தில் கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவில் உள்ள கணியூர் ஊராட்சிக்கு சிறந்த ஊராட்சி நிர்வாகத்திற்கான ஐஎசுஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.[10]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads