கபூர்தலா சமஸ்தானம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கபூர்தலா சமஸ்தானம் (Kapurthala State), 1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் கபூர்தலா மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் கபூர்தலா நகரம் ஆகும். 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கபூர்தலா இராச்சியம் 352 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 167 கிராமங்களும், 3,14,341 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. [1] இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 13 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .
Remove ads
வரலாறு
சாட் இன அலுவாலியா வம்சத்தின் ஜஸ்சா சிங் 1772-இல் கபூர்தலா சமஸ்தானத்தை நிறுல்வினார்.[2][3] .[4].[5] சீக்கியப் பேரரசர் ரஞ்சித் சிங்கின் கீழ் சிற்றரசாக கபூர்தலா சமஸ்தானம் இருந்தது. பின்னர் மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த கபூர்தலா இராச்சியம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற கபூர்தலா இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பஞ்சாப் மாகாணத்தின் கீழ் செயல்பட்டது. கபூர்தலா இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 13 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.
1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி கபூர்தலா இராச்சியம் 1947-ஆம் ஆண்டின் இறுதியில் பஞ்சாப் மாநிலத்துடன் இணக்கப்பட்டது. தற்போது இந்த இராச்சியப் பகுதிகள் கபூர்தலா மாவட்டப் பகுதிகளைக் கொண்டுள்ளது.
ஆட்சியாளர்கள்


- பதே சிங் அலுவாலியா - (10 சூலை 1801 – 20 அக்டோபர் 1837)[6][7][8]
- நிகால் சிங் - (20 அக்டோபர் 1837 – 13 செப்டம்பர் 1852)
- ரண்தீர் சிங் - (13 செப்டம்பர் 1852 – 2 ஏப்ரல் 1870)
- கரக் சிங் - (2 ஏப்ரல் 1870 – 3 செப்டம்பர் 1877)
- ஜெகத் சிங் - (3 செப்டம்பர் 1877 – 12 டிசம்பர் 1911)
- ஜெகத்ஜித் சிங் - (12 டிசம்பர் 1911 – 15 ஆகஸ்டு 1947)
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads