கரிவலம்வந்தநல்லூர்

From Wikipedia, the free encyclopedia

கரிவலம்வந்தநல்லூர்map
Remove ads

கரிவலம்வந்தநல்லூர் (Kari Valam Vantha Nallur) இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோயில் வட்டம், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம், கரிவலம்வந்தநல்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும்.[4][5]

விரைவான உண்மைகள்

இதற்கு கருவை என்ற மற்றுமோர் பெயரும் உண்டு. கரி வலம் வந்த நல்லூர் என்பதன் மரூஉவே கருவை என்பது.

Remove ads

இவ்வூரின் சிறப்புகள்

கோவில்

இந்த ஊரில் பால்வண்ணநாதர் உடனுறை ஒப்பனை அம்மன் கோவில் உள்ளது.

தலவரலாறு

(கரி=யானை) இந்த இடத்தில் யானை சிவனை வலம் வந்து தரிசித்ததாக வரலாறு கூறுகிறது.

இவ்வூரிலே வாழ்ந்த சிறந்த தமிழ் புலவரும் அரசரும் அடியாருமாகிய வரதுங்கராம பாண்டியர் இயற்றிய கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, கருவைக் கலித்துறை யந்தாதி, வெண்பா அந்தாதி என்ற மூன்று பிரபந்தங்களும் இத்தலத்தைப் பற்றியனவே யாகும்.

  1. ஆதிமூல அய்யனார் உத்தண்டகாளை சுவாமி திருக்கோவில்.ஊரின் முக்கிய காவல் தெய்வமாக உத்தண்ட காளை சுவாமி இருப்பதாக ஊர்மக்களால் நம்பப்படுகிறது.மேலும் இக்கோவில் சைவ செட்டியார்கள்,சைவ பிள்ளைமார் ஜாதி பிரிவினரின் குலதெய்வ கோவிலாகும்.[சான்று தேவை]
Remove ads

தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலம்

தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்களுள் இது அக்கினித்தலம் ஆகும்.[6]

காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட இடம்

மஹாத்மா காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட இடங்களில் ஒன்று. இங்குள்ள நிட்சேப நதியில்தான் மஹாத்மா காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்டது. காந்தியின் நினைவாக இந்த நதிக்கரை அருகே சிறு சதுக்கம் கட்டப்பட்டது. [7]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads