கழாத்தலையார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கழாத்தலையார் அல்லது கழாஅத்தலையார் எனக்குறிப்பிடப்படும இவர் சங்க காலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர்.[1] இப்புலவர் தம் பாடல் ஒன்றில் தன் மகன் வெட்டுண்டு கிடப்பதைப் பார்த்து தன் தலையைக் கழுவாமல் இருந்த ஒருத்தியைக் குறிப்பிடுகியார். இவரது பெயர் தெரியாத நிலையில் இவரை இவரது பாடலில் பயின்றுவரும் தொடரைக்கொண்டு 'கழாஅத்தலையார்' என்றனர்.[2][3] புறநானூற்றில் காணப்படும், 62, 65, 270, 288, 289, 368 ஆம் பாடல்கள் இப்புலவரால் பாடப்பட்டவை.
இவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டளவில் வாழ்ந்தவர் எனக் கருதப்படுகின்றது.[4]
Remove ads
கழாஅத்தலையார் குறிப்பிடும் வரலாற்றுச் செய்திகள்
திருப்போர்ப்புறம் போர் |
வெண்ணிப் போர் |
- சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் சோழன் வேல்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி ஆகிய இருவரும் திருப்போர்ப்புறம் என்னுமிடத்தில் தம் படைகள் சாய்ந்த பின் இருவருமாகத் தனித்து நின்று போராடி இருவருமே மாய்ந்தனர்.[5] அந்தப் போர்க்களத்தில் குற்றுயிரும் கொலையுயிருமாகக் கிடந்த சேரனை நேரில் கண்டு அவனது மார்பில் கிடந்த ஆரத்தைப் பரிசாக வழங்கும்படி இப் புலவர் கேட்கிறார்.[6]
- போர்க்களத்தில் கரிகாலன் தன் வலிமையை வெளிப்படுத்தி வேல் வீசியபோது, அது பெருஞ்சேரலாதனின், முதுகு வழியே பாய்ந்து சென்றது. இதற்காக வருந்திய சேரன் போர்க்களத்திலேயே வடக்கிருந்து உயிர் துறந்தான்.[7]
- வீரத் தாய்மார் போர்களம் சென்று காண்பது வழக்கம். போர்களத்தில் சாய்ந்து கிடந்த மகனை அவது தாய் தழுவ விடாமல் பருந்துகள் மொய்த்துக்கொண்டிருந்தன.[8] ஊரார் பொற்கலத்தில் கள் வழங்கிக்கொண்டிருந்தனர். அப்போது போருக்கு அழைக்கும் ஓசை கேட்டது. அங்கிருந்த மூதிலாள் என்னும் மறக்குலப் பெண் (போருக்குச் செல்லத்) தன் மகனுக்கு ஊற்றிக் கொடுக்கும்படி வேண்டினாள்.[9]
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads