காசிம் ரசிவி
ஐதராபாத்தின் அரசியல் தலைவர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காசிம் ரசிவி (Kasim Razvi) 17 ஜூலை 1902-15 ஜனவரி 1970) ஐதராபாத் இராச்சியத்தின் அரசியல்வாதி ஆவார். 1946 டிசம்பர் முதல் 1948 இல் மாநில இணைப்பு வரை மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் கட்சியின் தலைவராக இருந்தார்.[3] அவர் மாநிலத்தில் இரசாக்கர் என்ற போராளிக் குழுவின் நிறுவனராகவும் இருந்தார். இவர் ஐதராபாத் நிசாமுடன் நெருக்கமாக இருந்தார். ஐதராபாத் மாநிலத்தை இந்திய ஒன்றியத்துடன் இணைப்பதை இவர் எதிர்த்தார். நிசாமின் சுதேச அரசை இந்தியாவுக்கு பதிலாக பாக்கித்தானுடன் சேர்க்கும் திட்டமும் இவரிடம் இருந்தது.[4][5][6][7]
Remove ads
ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்
காசிம் ரசிவி ஐக்கிய மாகாணங்களில் பிறந்தார்[1] [2] அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். பட்டப்படிப்புக்குப் பிறகு ஐதராபாத் மாநிலத்திற்கு குடிபெயர்ந்தார். நகரில் முகமது அலி பாசிலிடம் ஒரு குறுகிய பயிற்சி பெற்றார். பின்னர் இவர் ஒசுமானாபாத் மாவட்டத்திலுள்ள லாத்தூரில் வழக்கறிஞராக பயிற்சியைத் தொடங்கினார். அங்கு இவரது மாமனார் அப்துல் ஹை துணைக் கண்காணிப்பாளராக இருந்தார்.[8]
முன்னாள் ஐதராபாத் அரசின் ஊழியர் முகமது ஐதர் கருத்துப்படி, லத்தூரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருந்தது. ரசிவி நிழல் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டு சிறிது செல்வத்தை குவித்தார். அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்கட்சியில் சேர்ந்த பிறகு, ரசிவி தனது சொத்துக்கள் அனைத்தையும் கட்சிக்கு நன்கொடையாக அளித்ததாகக் கூறப்படுகிறது. இது இவரை பிரபலமாக்கியது. மேலும், இவருக்கு சித்திக்-இ-தெக்கான் என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது.[8]
Remove ads
போலோ நடவடிக்கை
போலோ நடவடிக்கையின் போது இந்தியத் தரைப்படை இரசாக்கர்களை விரட்டியது. காசிம் இரிசுவி கிட்டத்தட்ட பத்தாண்டு காலம் இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார். தான் விடுவிக்கப்பட்ட நாற்பத்தெட்டு மணி நேரத்திற்குள் அவர் பாக்கித்தானுக்கு குடிபெயரவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் பின்னர் விடுவிக்கப்பட்டார்.[9] இவருக்கு பாக்கித்தானில் புகலிடம் வழங்கப்பட்டது.[10]
ஐதராபாத், இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பின்னர் இரசாக்கர்கள் படை கலைக்கப்பட்டது. மேலும், மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் கட்சி தடை செய்யப்பட்டது. இருப்பினும் இது 1957 இல் காங்கிரசு அரசாங்கத்தின் கீழ் அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் (ஏஐஐஎம்) என மறுபெயரிடப்பட்டது.
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
காசிமுக்கு "பேராசிரியர், மருத்துவர், ஆடை வடிவமைப்பாளர், மற்றும் ஆலோசகர்" என 10 குழந்தைகள் (5 மகன்கள் மற்றும் 5 மகள்கள்) உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் குடியேறியுள்ளனர்.[11]
நூல் பட்டியல்
- Benichou, Lucien D. (2000), From Autocracy to Integration: Political Developments in Hyderabad State, 1938-1948, Orient Blackswan, ISBN 978-81-250-1847-6
- Hyder, Mohammed (2012), October Coup, A Memoir of the Struggle for Hyderabad, Roli Books, ISBN 978-8174368508
- Raghavan, Srinath (2010), War and Peace in Modern India, Palgrave Macmillan, ISBN 978-1-137-00737-7
மேலும் படிக்க
- Kamat, Manjiri N. (2007), "Border incidents, internal disorder and the nizam's claim for an independent Hyderabad", in Waltraud Ernst; Biswamoy Pati (eds.), India's Princely States: People, Princes and Colonialism, Routledge, pp. 212–224, ISBN 978-1-134-11988-2
- Gandhi, Rajmohan (1990), Patel, A Life, Navajivan Pub. House
- "Holding them captive?" at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது 29 சூலை 2003) opinion in The Hindu 27 April 2003
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads