கோலாலம்பூர்–காராக் விரைவுச்சாலை
மலேசியாவில் கோலாலம்பூர்; காராக் மாநகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலை From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோலாலம்பூர் காராக் விரைவுச்சாலை அல்லது காராக் விரைவுச்சாலை
(ஆங்கிலம்: Kuala Lumpur–Karak Expressway; மலாய்: Lebuhraya Kuala Lumpur–Karak) என்பது மலேசியாவில் கோலாலம்பூர்; காராக் மாநகரங்களை இணைக்கும் விரைவுச்சாலையாகும். மலேசியாவின் பழைமையான நெடுஞ்சாலைகளில் இந்தச் சாலையும் ஒன்றாகும். மலேசியாவில் உள்ள இந்தியர்கள் இந்தச் சாலையை, காராக் நெடுஞ்சாலை என்று அழைப்பது வழக்கம். அண்மையில் இந்தச் சாலைக்கு விரைவுச்சாலை என தரம் உயர்த்தப்பட்டது.
இந்த நெடுஞ்சாலை, தென்மேற்கில் இருக்கும் சிலாங்கூர் மாநிலத்தின் கோம்பாக் நகருக்கும்; வட மேற்கில் இருக்கும் பகாங் மாநிலத்தின் காராக் நகருக்கும் இடையே செல்கிறது.
முன்பு இந்தச் சாலை காராக் நகரத்திற்கும் குவாந்தான் நகரத்திற்கும் செல்வதற்கான ஒருவழி தலைநெடுஞ்சாலையாக (trunk road) இருந்தது. அதே வேளையில் மலேசிய கூட்டரசு சாலை 2-இன் ஒரு பகுதியாகவும் இருந்தது.
1997-ஆம் ஆண்டில், அந்தக் மலேசிய கூட்டரசு சாலை 2, மேம்படுத்தப் பட்டதும் கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலை என பெயர் மாற்றம் கண்டது.
Remove ads
விளக்கம்
விரைவுச்சாலை (ஆங்கிலம்: Expressway; மலாய்: Lebuhraya).
மலேசிய விரைவுச்சாலை (ஆங்கிலம்: Malaysian Expressway; மலாய்: Lebuhraya Malaysia).
நெடுஞ்சாலை (ஆங்கிலம்: Highway; மலாய்: Laluan).
மலேசியக் கூட்டரசு சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route; மலாய்: Laluan Persekutuan Malaysia).
பொது
இந்த நெடுஞ்சாலையைப் பற்றி சில பிரபலமான புராணக் கதைகளும்; நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இந்தச் சாலையை "உலகின் பேய்கள் நிறைந்த நெடுஞ்சாலைகளில்" ஒன்றாக அறிவித்து இருக்கிறார்கள்.
இரவில் தாமதமாக வாகனம் ஓட்டும் பலர் இந்த சாலையில் விசித்திரமான உயிரினங்கள்; காணாமல் போன ஒரு பள்ளி மாணவன் மற்றும் பொந்தியானாக் பேய் (Pontianak) போன்றவற்றைப் பார்த்து இருப்பதாகவும் சொல்லப் படுகிறது. ஓட்டுநர் இல்லாத மஞ்சள் நிறக் காரையும் சிலர் பார்த்ததாகவும் சொல்லப் படுகிறது.[1]
Remove ads
வரலாறு
1970-ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் கோலாலம்பூரில் உள்ள கோம்பாக் பகுதியில் இருந்து, பகாங், பெந்தோங் நகருக்குச் செல்ல எனும் குறுகலான மலேசியச் கூட்ட்ரசு சாலை 68 இருந்தது.
அதற்கு மாற்றாக மலேசிய அரசாங்கத்தால் கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டது. இந்த நெடுஞ்சாலை கட்டப்படும் போது கெந்திங் செம்பா (Genting Sempah) எனும் இடத்தில் 900 மீட்டர் சுரங்கப் பாதையும் உருவாக்கப்பட்டது.
முதலாவது சுரங்கப் பாதை
அந்த கெந்திங் செம்பா சுரங்கப் பாதைதான் மலேசியாவின் முதலாவது நெடுஞ்சாலை சுரங்கப் பாதையாகும். கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலை, 1979-ஆம் ஆண்டில், அப்போதைய பொதுப்பணிகள் மற்றும் தொடர்பு அமைச்சர் டத்தோ அப்துல் கானி கிலோங் (Dato Abdul Ghani Gilong) என்பவரால் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இருப்பினும், அந்த நேரத்தில் ஒரு விவசாய நாடாக இருந்த மலேசியாவிற்கு, இந்த நெடுஞ்சாலையின் கட்டுமானச் செலவுகள் மிகவும் அதிகமானதாக இருந்தது.
மலேசிய நெடுஞ்சாலை ஆணையm
எனவே, அனைத்துக் கட்டுமானப் பணிகளின் செல்வுகளை ஈடுகட்ட கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடிகளை அமைக்க அரசாங்கம் முடிவு செய்தது.
இதன் விளைவாக, கோம்பாக் மற்றும் பெந்தோங் ஆகிய இரண்டு இடங்களில் சுங்கச் சாவடிகள் கட்டப்பட்டன. அந்தச் சுங்கச்சாவடிகள், மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (Malaysian Highway Authority) கீழ் நிர்வகிக்கப் பட்டன.
முக்கிய நிகழ்வுகள்
28 ஜனவரி 1990 - கோம்பாக்கில் உள்ள கெந்திங் செம்பா சுரங்கப் பாதைக்கு அருகில் கிலோமீட்டர் 32.5-இல்; கூட்டரசு கலகப் பிரிவு காவல்துறை வாகனங்கள், ஒரு எண்ணெய் லாரி, ஒரு பயணிகள் பேருந்து மற்றும் 10 கார்கள் மோதிக் கொண்டதில் 11 கலகத் தடுப்புக் காவலர்கள் உட்பட 17 பேர் கொல்லப் பட்டனர்.
11 நவம்பர் 2015 - கனமழை காரணமாக, லெந்தாங் மற்றும் புக்கிட் திங்கி, இடையே விரைவுச்சாலையின் கி.மீ. 52.4-இல் நிலச்சரிவு ஏற்பட்டது. அதனால் அந்தப் பாதை போக்குவரத்துக்கு மூடப்பட்டது.
சுங்கச்சாவடி கட்டணங்கள்
(15 அக்டோபர் 2015 முதல்)
கோம்பாக் சுங்கச்சாவடி (GBK)
பெந்தோங் சுங்கச்சாவடி (BTG)
- குறிப்பு: தொட்டு செல் (Touch 'n Go) அட்டைகள் மற்றும் வானலை அடையாள அட்டைகள் (RFID) அல்லது சூட்டிகை அட்டை (SmartTAG) மூலமாக மட்டுமே சாவடிக் கட்டணங்களைச் செலுத்த முடியும். ரொக்கப் பணப் பரிமாற்றம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
Remove ads
காராக் நெடுஞ்சாலை சந்திப்புகள்
Remove ads
காட்சியகம்
- பகாங் புக்கிட் திங்கி அறிவிப்புப் பலகை
- காராக் சுரங்கப்பாதை
- காராக் நெடுஞ்சாலை
- E8 அறிவிப்புப் பலகை
மேற்கோள்கள்
மேலும் பார்க்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads