கிண்டி தொடருந்து நிலையம்

இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை, கிண்டி தொழிற்பேட்டைக்கு அருகிலுள்ள தொடருந்து நிலையம். From Wikipedia, the free encyclopedia

கிண்டி தொடருந்து நிலையம்map
Remove ads

கிண்டி தொடருந்து நிலையம் (Guindy railway station, நிலையக் குறியீடு:GDY) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் கிண்டி, பொது தகவல்கள் ...

இது சென்னைக் கடற்கரை நிலையத்திலிருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மற்றும் அண்ணா சாலையில், தேசிய நெடுஞ்சாலை 45 இல் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 12மீ உயரத்தில் உள்ளது.

Remove ads

வரலாறு

இந்த நிலையம் சென்னை நகரின் முதல் புறநகர் வழித்தடமான சென்னைக் கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. 1928இல் தொடங்கி மார்ச் 1931இல் இருப்புப்பாதை பணிகள் நிறைவடைந்தவுடன், புறநகர் இரயில் சேவைகள் 11 மே 1931 அன்று சென்னைக் கடற்கரைக்கும் - தாம்பரத்திற்கும் இடையில் தொடங்கப்பட்டன. இது நவம்பர் 15, 1931இல் மின்மயமாக்கப்பட்டது.[1]

திட்டங்கள் மற்றும் மேம்பாடு

இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [2][3][4][5]

அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சென்னை தொடருந்து கோட்டத்தில் 17 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, கிண்டி தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 13.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[6][7][8][9][10][11]

Remove ads

படங்கள்

சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads