கிமு 9ஆம் ஆயிரமாண்டு
ஆயிரமாண்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிமு 9-ஆம் ஆயிரமாண்டு (9th millennium BC) என்பது கிமு 9000 ஆம் ஆண்டு முதல் கிமு 8001 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியைக் குறிக்கும். இது புதிய கற்காலத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.
வளமான நிலமெங்கும் வேளாண்மை மேற்கொள்ளப்பட்டது. மட்பாண்ட வகைகள் பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டன. எரிக்கோ போன்ற பெரும் குடியேற்றங்கள் உப்பு, தீக்கல் வணிக வழியே உருவாக்கப்பட்டன. கடைசிப் பனியாற்றுக் காலத்தின் பனியாறுகள் குறைவடைந்ததை அடுத்து ஐரோவாசியா மீள்குடியேற்றம் இடம்பெற்றது. உலக மக்கள் தொகை ஏறத்தாழ ஐந்து மில்லியனுக்குக் குறைவாக இருந்தது.
Remove ads
நிகழ்வுகள்
- சில விலங்குகள் வளர்ப்பு விலங்குகளாக வீடுகளில் வளர்க்கப்பட்டன.
- மெசொப்பொத்தேமியாவில் பயிர்த்தொழில், வேளாண்மை (விவசாயம்) துவக்கம்.
- அம்பு, வில் கண்டுபிடிப்பு.
- சப்பானில் மிகப் பழைய மட்பாண்டம் செய்யப்பட்டது.
- எரிக்கோவில் புதிய கற்காலக் குடியேற்றம். கிமு 8350.
- நோர்வேயின் எய்க்கர் கிமு 8000 அளவில் குடியேறியிருந்தார்கள்.
- நாடோடி வேடர்கள் இங்கிலாந்து வந்தனர் கிமு 8300.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads