கிரீஷ் சந்திர முர்மு
இந்திய அரசு அதிகாரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிரீஷ் சந்திர முர்மு (Girish Chandra Murmu; சந்தாளி மொழி:ᱜᱤ᱾ ᱪᱚ᱾ ᱢᱩᱨᱢᱩ; பிறப்பு: 21 நவம்பர் 1959), ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் முதல் துணைநிலை ஆளுநராக நியமிக்கபட்ட இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாவார்.[2] ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்சில் பிறந்த இவர் முண்டா மொழி பேசும் சந்தாலி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.
1985-இல் குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாராக பணிபுரிந்தவர்.[3]
Remove ads
கல்வி
கிரிஷ் சந்திர முர்மு ஒடிசாவின் உத்கல் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் பிர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் முதுநிலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றவர்.
ஜம்மு காஷ்மீர் ஒன்றிய துணைநிலை ஆளுநராக

2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் புதிதாக நிறுவப்பட்ட ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி 31 அக்டோபர் 2019 அன்று முதல் ஒன்றியப் பகுதியானது.[4] ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் முதல் துணைநிலை ஆளுநராக 31 அக்டோபர் 2019 நள்ளிரவு அன்று கிரீஷ் சந்திர முர்மு பதவியேற்றார்.[5] [6][7][8] [9]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads