கிருட்டிணகிரி

தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia

கிருட்டிணகிரிmap
Remove ads

கிருட்டிணகிரி (Krishnagiri), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கிருட்டிணகிரி மாவட்டத்தின் தலைநகரமாகும். இது பெங்களூரில் இருந்து 90 கி.மீ., ஓசூரில் இருந்து 45 கி.மீ. மற்றும் தருமபுரியில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும்.

விரைவான உண்மைகள் கிருட்டிணகிரி, நாடு ...
Remove ads

வரலாறு

சேரநாட்டின் வரலாற்று ரீதியாக இது சேர மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. பின்னர் இந்த பகுதியில் சோழர்கள், பல்லவர்கள், கலிங்கை, நுளம்பர்கள், ஒய்சளர்கள், விசயநகரம் மற்றும் பீச்சப்பூர் அரசர்கள், மைசூர் மற்றும் மைசூர் உடையார்களின் கீழ் வந்தது. இப்பிராந்தியம் "தமிழ்நாடின் நுழைவாயில்" என்று அழைக்கப்படும். தமிழ்நாட்டின் தெற்கு பகுதியில் ஏகாதிபத்தியம் மற்றும் சுரண்டல் உள்நோக்கத்துடன் நுழைந்த அந்நியப் படைகளை, தாக்குதல்களை மீறி பாதுகாப்பு பணியாற்றினர் விசயநகர பேரரசர்கள். முன்னும் பின்னுமாக அதிக பாதுகாப்புடன் கிருட்டிணகிரி மலை மீது விசயநகர பேரரசர்களால் கட்டப்பட்ட கம்பீரமான கோட்டை, இப்போதும் சாட்சியாக நிற்கிறது.

முதல் மைசூர் போரின் போது பிரித்தானிய துருப்புக்கள் காவேரிப்பட்டணத்தில் இருந்த ஐதர் அலி படைகளைத் தாக்க கிருட்டிணகிரி வழியாக வந்தது. பிரித்தானிய இராணுவம் இங்கு தோற்கடிக்கப்பட்டது. பிறகு இரண்டாம் மைசூர் போரில் "சிரீரங்கப்பட்டணம் உடன்பாடு" மூலம் சேலம் மற்றும் பாரா மகால் முழு பிரித்தானிய ஆட்சிக்கு திருப்பி அளிக்கப்பட்டன. கி.பி. 1792 ஆம் ஆண்டில், கேப்டன் அலெக்சாண்டர் ரீட் இந்த பகுதியின் முதல் மாவட்ட கலெக்டர் ஆனார். ராபர்ட் கிளைவ், பின்னர் சென்னை மாகாணத்தின் ஆளுநர் கீழ், கிருட்டிணகிரி பாரா மகால் தலைமையகம் ஆனது.

இந்த மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்த டாக்டர் சி. இராசகோபாலச்சாரி சுதந்திர இந்தியாவில், காங்கிரசு கட்சியின் தலைவரும் முதல் கவர்னர் செனரலாக நாட்டில் மிக அதிக உயர்ந்தார், மற்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார். வரலாற்று முக்கியத்துவம் மற்றும் கல்வி, பொருளாதாரம் மற்றும் தற்போதைய கிருட்டிணகிரி சுற்றுலா அதிகரிப்புக்கு அது ஒரு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பதாக கிருட்டிணகிரி தமிழ்நாடு அரசு 30ஆவது மாவட்டம் உருவாக்கப்பட்டது. திரு. மங்கத் ராம் சர்மா இ.ஆ.ப கிருட்டிணகிரி மாவட்டத்தில் முதல் மாவட்ட ஆட்சியர் ஆனார். கிருட்டிணகிரி மாவட்டம் ஐந்து தாலுகாக்களில் பத்து தொகுதிகளைக் கொண்டுள்ளது. 9 பிப்ரவரி 2004 அன்று தருமபுரி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.[1]

Remove ads

மக்கள் வகைப்பாடு

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, ம.தொ. ...
மேலதிகத் தகவல்கள் மதவாரியான கணக்கீடு ...

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 71,323 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கிருட்டிணகிரி மக்களின் சராசரி கல்வியறிவு 86.14% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 91.02%, பெண்களின் கல்வியறிவு 81.40% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. கிருட்டிணகிரி மக்கள் தொகையில் 10.86% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, கிருட்டிணகிரியில் இந்துக்கள் 71.37%, முசுலிம்கள் 24.70%, கிறித்தவர்கள் 3.77%, சீக்கியர்கள் 0.05%, சைனர்கள் 0.07%, 0.03% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.01% பேர்களும் உள்ளனர்.

Remove ads

பொருளாதாரம்

இங்கு மா சாகுபடி 300,17 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது கிருட்டிணகிரி மாவட்டம். முக்கிய பயிர் மாங்கனி ஆகும். மாவட்டத்தில் ஆண்டுதோறும் 300,000 டன் மா உற்பத்தி ஆகும். மா உற்பத்தியில் கிருட்டிணகிரி மாவட்டம் தமிழ்நாட்டில் முதல் இடத்தில் உள்ளது. ஒரு பெரிய அளவிலான மாம்பழ ஏற்றுமதி மண்டலம் கிருட்டிணகிரி மாவட்டத்தில் ஏற்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு அதிக லாபம் விளைவிக்கின்றது. மாம்பழம் பதப்படுத்தும் தொழில் அத்துடன் வளர்ந்து வருகின்றது.

போக்குவரத்து

Thumb

திருவண்ணாமலை முதல் கிருட்டிணகிரி வரை 107கி.மீ தூரம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

கிருட்டிணகிரி மாவட்ட சாலைப் போக்குவரத்து சிறப்பாக விளங்குகிறது. ஏனெனில் சென்னை - பெங்களூரு தொழிற்சாலை தாழ்வாரத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைகளின் வழியாக கிட்டத்தட்ட மாவட்டத்தின் அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளது. நான்கு தேசிய நெடுஞ்சாலைகள் இந்நகரத்தை இணைக்கிறது.

தொடர் வண்டி போக்குவரத்து இந்த மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்துக்கு இணையாக இல்லை. வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் இருந்து கிருட்டிணகிரிவரை 1905 ஆம் ஆண்டு முதல் 1936 வரை பயணிகள் போக்குவரத்து பயன்பாட்டில் இருந்துவந்தது. அதன்பின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 1942ஆம் ஆண்டு தொடர்வண்டிப் பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதன் பிறகான காலகட்டத்தில் இப்பகுதி மக்கள் தொடர்வண்டி வசதிவேண்டும் என கோரிவருகின்றனர்.[3] சேலம் - பெங்களூரு பாதையில் ஓசூர் தொடர்வண்டி நிலையம் உள்ளது. இந்த பாதை 1913இல் போடப்பட்டது. 1941இல் இப்பாதையும் மூடப்பட்டது. மீண்டும் 28 ஆண்டுகள் கழித்து பெங்களூர் சேலம் தொடர்வண்டி பாதை மீட்டர் கேச்சு பாதையாக போடப்பட்டு, போக்குவரத்து தொடங்கியது. 1996இல் இப்பாதை அகலப்பாதையாக மேம்படுத்தப்பட்டது.[4] (கிருட்டிணகிரியில் இருந்து 45 கி.மீ.) மாநில தலைநகரான சென்னையை தொடர் வண்டி பாதையில் மாவட்டத்தை இணைக்கும் வகையில் ஒசூர் சோலார்பேட்டை இருப்புப்பாதையை இணைக்க நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வருகிறது.

அருகில் உள்ள வணிக பயன்பாட்டுக்கான வானூர்தி நிலையங்கள் 92 கி.மீ தொலைவில் உள்ள பெங்களூரு சர்வதேச விமான நிலையம் ஆகும்.

Remove ads

சுற்றுலா மையம்

Thumb
கிருட்டிணகிரி அணை

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கிருட்டிணகிரிக்கு வருகிறார்கள். கிருட்டிணகிரி அணை (கிருட்டிணகிரி நீர்த்தேக்கம் திட்டம்) 1958-ல் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராசர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. கிருட்டிணகிரி அணை நகருக்கு 6 கி.மீ. அருகில் அமைந்துள்ளது. கிருட்டிணகிரி அருகே பழமையான கோயில்களில் பல்வேறு உள்ளன. பாரம்பரிய மற்றும் வரலாற்றுப் பின்னணி உடைய ஒரு அருங்காட்சியகம் நகரின் மையப்பகுதியில் உள்ளது. இந்த அருங்காட்சியகம், 1993 கி.பி. முதல் செயற்பட்டு வருகின்றது வரலாற்று நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

*ஊத்தங்கரை பாம்பாரு அணை சுற்றுலா தளமாக உள்ளது. தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிளாலம், கிருட்டிணகிரியின் ஏற்காடு என்றழைக்கப்படும் பகுதியாகும் இது மாவட்டத்தில் மிக உயர்ந்த மலைப் பிரதேசமாகும்.

Remove ads

நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்

மேலதிகத் தகவல்கள் நகராட்சி அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ...

கிருட்டிணகிரி நகராட்சியானது கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் கிருட்டிணகிரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஏ. செல்லக்குமார் வென்றார்.

2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை அதிமுகவின், கே. அசோக் குமார் வென்றார்.

Remove ads

வானிலை மற்றும் காலநிலை

கிருட்டிணகிரி கோடைகாலத்தில் வெப்பமண்டல பருவநிலையை (Tropical climate) பெற்றுள்ளது. கிருட்டிணகிரி கோடை, குளிரைவிட கடுமையான மழைகாலத்தை கொண்டுள்ளது. இந்த காலநிலை கொப்பென்-கைகர் (Köppen-Geiger climate classification) தட்பவெப்ப படி கருதப்படுகிறது. இங்கே மிதமான வெப்பநிலை 26.5 பாகை செல்சியசு. இங்கே மழை 789 மிமீ அளவு விழுகிறது. பருவகாலத்தில் இந்த பகுதியில் மழை கணிசமான அளவு கொண்டுள்ளது. கிருட்டிணகிரி நீண்ட பருவ காலத்தை அனுபவிக்கிறது. குளிர்காலம் பொதுவாக இனிமையான மற்றும் வசதியாக இருக்கும். மூன்று மாறுபட்ட சீதோசணம் நிலவுகிறது. கோடை மார்ச்சு - சூன் வரை இருந்து வருகிறது. இந்த நேரத்தில் வெப்பநிலை 38 பாகை செல்சியசு மற்றும் 32 °C என்ற குறைந்தபட்ச நனை வரை சூடான மற்றும் பாதரசம் உயர்வு உள்ளன. ஏப்ரல் மற்றும் மே பொதுவாக ஆண்டு வெப்பமான மாதங்களாகவும், பருவகாலம்: நவம்பர் - சூலை மாதங்களாகவும் உள்ளன. இந்த நேரத்தில் வெப்பநிலை லேசாகவும் மற்றும் இனிமையாகவும் உள்ளன. கன மழை குறுகிய இடைவெளியில் எதிர்பார்க்கலாம். திசம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர்கால மாதங்களில் அமைப்பாகவும், வெப்பநிலை 13 °C ஆக கொண்டுள்ளது. [5]

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், கிருட்டிணகிரி, மாதம் ...
Remove ads

படங்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads