குறிச்சான்பட்டி ஊராட்சி

இது தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் உள்ளது From Wikipedia, the free encyclopedia

Remove ads

குறிச்சான்பட்டி ஊராட்சி (Kurichanpatty Gram Panchayat), தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1981 ஆகும். இவர்களில் பெண்கள் 981 பேரும் ஆண்கள் 1000 பேரும் உள்ளனர்.

விரைவான உண்மைகள்
Remove ads

போக்குவரத்து

குறிச்சான்பட்டியானது சுரண்டையிலிருந்து கீழக்கலங்கல் வழியாக செல்லும் சாலையில் அமைந்துள்ளது. சுரண்டையிலிருந்து சங்கரன்கோவிலுக்கு மாற்றுப்பாதையாகவும் உள்ளது. ஒரு அரசுப்பேருந்தும் இரண்டு சிற்றுந்துகளும் இவ்வூரின் வழியாக சுரண்டையிலிருந்து கீழக்கலங்கலுக்கு நாள்தோறும் இயக்கப்படுகிறது.

அடிப்படை வசதிகள்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]

மேலதிகத் தகவல்கள் அடிப்படை வசதிகள், எண்ணிக்கை ...
Remove ads

சிற்றூர்கள்

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:

  1. இரதமுடையார்குளம்
  2. கரையாளனூர்
  3. குறிச்சான்பட்டி

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads