கொனியேட்டி ரோசையா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொனிஜெடி ரோசையா (Konijeti Rosaiah, தெலுங்கு: కొణిజేటి రోశయ్య, 4 சூலை, 1933- 4 திசம்பர், 2021) ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஆவார்.[2][3] இந்திய தேசியக் காங்கிரசின் அரசியல்வாதியான அவர் அமைச்சுப் பதவிகளில் இருந்துள்ளார். அவர் மாநில நிதி அமைச்சராகப் பணியாற்றிய பாங்கு பெரிதும் பாராட்டப்பட்டது. ஆந்திராவில் 16 முறை வரவுசெலவு திட்டத்தை தாக்கல் செய்து சாதனை படைத்தவர். கட்சித் தலைமையின் கட்டளைக்கிணங்கி முதல்வர் பணியேற்ற இவர் நவம்பர் 24, 2010 அன்று தமது சொந்தக் காரணங்களுக்காக பதவி விலகினார்.[4] இவரது பதவி விலகலை அடுத்து கிரண்குமார் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.
ஆகத்து 31, 2011 முதல் ஆகத்து 30, 2016 வரை தமிழ்நாட்டின் ஆளுநராகப் பணியாற்றினார்.[5]
Remove ads
பதவிகள்
- 1968, 1974 மற்றும் 1980 ஆந்திர மாநில சட்டப்பேரவை
- 1977-1979 ஆந்திர மாநிலம் தொழில்துறை உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர்.
- 1978-1979, 1983-1985 ஆந்திர மாநில சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர்.
- 1979-1980 ஆந்திர மாநில சாலை மற்றும் கட்டிடத்துறை அமைச்சர்.
- 1980-1981 ஆந்திர மாநில வீட்டு வசதி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர்.
- 1982-1983 ஆந்திர மாநில உள்துறை அமைச்சராக இருந்தார்.
- 1989-1990 ஆந்திர மாநில நிதி, மின்சாரம், போக்குவரத்து, உயர்கல்வி, கைத்தறி மற்றும் கதர்துறை, அமைச்சர்.
- 1991-1992 ஆந்திர மாநில மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்.
- 1992-1994 ஆந்திர மாநில நிதி, மின்சாரம், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்.
- 1995-1997 ஆந்திரமாநிலம் காங்கிரஸ் கட்சித் தலைவர்.
- 1998 நரசரொபேட் மக்களவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்.
- 2004-2009 ஆந்திர மாநில நிதி, திட்டம்,குடும்ப நலத்துறை அமைச்சர்.
- 2009-2010 ஆந்திர மாநில முதல்வர்.
- 2011-2016 தமிழ்நாடு ஆளுநர்.[6][7]
Remove ads
விருதுகள்
2007 ஆம் ஆண்டு ஆந்திரப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.[8]
மறைவு
உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சைபெற்றுவந்த இவர், சிகிச்சை பலனின்றி, ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், 2021 திசம்பர் 4 அன்று காலை 8 மணியளவில் உயிரிழந்தார்.[9]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads