கொலை-பாலாஸ் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொலை-பாலாஸ் மாவட்டம் (Kolai-Pallas District) (பஷ்தூ: کولئ پالس ولسوالۍ , Urdu: ضِلع کولئ پالس), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2][3][4][5]
கீழ் கோகிஸ்தான் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 31 மே 2018 அன்று இம்மாவட்டம் நிறுவப்பட்டது.[6][7]
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 2,74,923 ஆகும். அதில் ஆண்கள் 1,49,104 மற்றும் பெண்கள் 1,25,814 ஆக உள்ளனர். 100% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இசுலாமியர்கள் அல்லாத சிறுபான்மையோர் 7 பேர் மட்டுமே.[1] கோகிஸ்தானி மொழி பேசும் தார்தாரிக் மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். பஷ்தூ மொழி பேசுபவர்கள் 7.09% ஆக உள்ளனர்.
மாவட்ட நிர்வாகம்
இம்மாவட்டம் இரண்டு தாலுகாக்கள் கொண்டுள்ளது. அவைகள்:[6][7]
- பாட்டாரா கொலை தாலுகா
- பாலாஸ் தாலுகா
இம்மாவட்டத்தில் 52 ஒன்றியக் குழுக்கள் கொண்டுள்ளது.
மாகாணச் சட்டமன்ற உறுப்பினர்
இம்மாவட்டம் மாகாணச் சட்டமன்றத்திற்க் ஒரு தொகுதி கொண்டுள்ளது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads