கொல்லம்

கேரளத்தின் கொல்லம் மாவட்ட தலைநகரம் From Wikipedia, the free encyclopedia

கொல்லம்map
Remove ads

கொல்லம் (மலையாளம்: കൊല്ലം) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கொல்லம் மாவட்டத்தில் இருக்கும் ஒரே மாநகராட்சி ஆகும்.

விரைவான உண்மைகள் கொல்லம், நாடு ...

இது இந்தியாவின் மலபார் கடற்கரையில் இலட்சத்தீவுக் கடல் எல்லையில் உள்ள ஒரு பண்டைய துறைமுகம் மற்றும் நகரமாகும். இது மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து வடக்கே 71 கி.மீ. (44 மைல்) தொலைவில் உள்ளது.[2]  இந்த நகரம் அஷ்டமுடி ஏரி மற்றும் கல்லடா ஆற்றின் கரையில் உள்ளது .[3][4][5] இது கொல்லம் மாவட்டத்தின் தலைமையகமாகும். கேரளாவின் நான்காவது பெரிய நகரமான கொல்லம் முந்திரி பதப்படுத்துதல் மற்றும் தென்னை நார் உற்பத்திக்கு பெயர் பெற்றது. இது கேரளாவின் உப்பங்கழியின் தெற்கு நுழைவாயில் மற்றும் ஒரு முக்கிய சுற்றுலா தலமாகும்.

Remove ads

புவியியல்

கொல்லம் பகுதியானது, 8.8932°N 76.6141°E / 8.8932; 76.6141 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 28.32 மீட்டர் (125.72 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

2001ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 361,441 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 49% ஆண்கள்; 51% பெண்கள் ஆவார்கள். கொல்லம் மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 84%; பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. கொல்லம் மக்கள் தொகையில் 11%, ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads