கௌசல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கௌசல் (Khawzawl), வடகிழக்கு இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் உள்ள கௌசல் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இது மிசோரம் மாநிலத் தலைநகரான அய்சால் நகரத்திற்கு தென்கிழக்கே 128 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது கிழக்கு இமயமலைத் தொடரில் 1187 மீட்டர் உயரத்தில் உள்ளது.
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,306 குடியிருப்புகள் கொண்ட கௌசல் பேரூராட்சியின் மக்கள் தொகை 11,022 ஆகும். அதில் 5,616 ஆண்கள் மற்றும் 5,406 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 15.84% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 963 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 96.64 % ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 0.01% மற்றும் 70% வீதம் உள்ளனர். இந்து சமயத்தினர் 1.05%, இசுலாமியர் 0.24%, கிறித்தவர்கள் 98.51% மற்றும் பிற சமயத்தினர் 0.20% வீதம் உள்ளனர்.[1]இந்நகரத்தில் மிசோ மொழி மற்றும் ஆங்கில மொழிகள் பேசப்படுகிறது.
Remove ads
கல்வி
- கௌசல் அரசுக் கல்லூரி[2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads