சக்தி கிருஷ்ணசாமி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
த. க. கிருஷ்ணசாமி என்று அறியப்படும் தஞ்சாவூர் கலியபெருமாள் கிருஷ்ணசாமி (மார்ச் 11, 1913 - நவம்பர் 8, 1987) தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தினைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர், பாடலாசிரியர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் கலியபெருமாள்–வேதவள்ளி தம்பதியருக்கு மகனாக மார்ச் 11, 1913-ல் தஞ்சாவூரில் பிறந்தார். 1950களில் தொடங்கி 1970 வரை பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். தமிழ்த் திரையுலகின் சிறந்த திரைக்கதையாசிரியர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார்.[1][2]
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
கிருஷ்ணசாமி தனது எழுத்துப் பணியை நாடக ஆசிரியராகத் தொடங்கினார். சக்தி நாடக சபா என்ற நாடகக் கம்பனி ஒன்றை நடத்தி வந்தார். இதனால் “சக்தி” கிருஷ்ணசாமி என்று அழைக்கப்பட்டார். அதில் நடிகர்களாகப் பணிபுரிந்த சிவாஜி கணேசன், வி. கே. ராமசாமி, எம். என். நம்பியார் போன்ற நடிகர்கள் பிறகாலத்தில் திரைபடங்களிலும் வெற்றி பெற்றனர்.[1] 1957ல் கிருஷ்ணசாமி வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற நாடகத்தை எழுதினார். சிவாஜி கணேசன் கட்டபொம்மனாக நடித்த இந்த நாடகம் வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து அதனைத் திரைப்படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டது. ம. பொ. சிவஞானத்தின் ஆய்வின் அடிப்படையில் கிருஷ்ணசாமியே அதற்கும் கதை வசனம் எழுதினார். அவரது அனல் பறக்கும் வசனங்கள் அப்படத்தின் வெற்றியில் பெரும் பங்கு வகித்தன.[3] படத்தின் கதை-வசனம் தனியே புத்தகமாகவும், ஒலி நாடாவாகவும் விற்பனையாகுமளவுக்கு மக்களிடையே வரவேற்பைப்பெற்றது.[4][5][6][7] அடுத்த இருபது ஆண்டுகளுக்கு பல வெற்றிப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதினார் கிருஷ்ணசாமி. இதைத் தவிர பலத் திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார்.
Remove ads
திரைப்பட வசனங்கள்
- இவர் தமிழ் திரையுலகில் அன்றைய முன்னணி நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்ற நடிகர்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
- மேலும் சிவாஜி கணேசனின் ஆரம்ப காலத்தில் நாடக ஆசிரியர்களில் ஒருவராக சக்தி டி. கே. கிருஷ்ணசாமி திகழ்ந்தார் அதனாலே பின்னாளில் சிவாஜி கணேசன் அவர்கள் எப்போதும் கிருஷ்ணசாமியை குரு என்று அன்புடன் அழைப்பார்.
- சிவாஜி கணேசன் தான் நடிப்பின் மீது ஆர்வம் கொள்ள வைத்த நாடகமான வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை படமாக்க வேண்டும் என்ற முயற்சியோடு சக்தி கிருஷ்ணசாமி இடம் கூறிய போது அதை பின்னாளில் திரைப்படமாக்க பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் படமாக வெளிவந்த போது அதற்கு திரைக்கதை வசனகர்த்தாவாக கிருஷ்ணசாமி வசனத்தில் பொறி பறக்கும் வசனம் எழுதி தமிழ் திரையுலக ரசிகர்களை சிவாஜி கணேசன் பக்கமே ஈர்க்கும் வகையில் செய்தார்.
- இந்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் கதை வசனம் எழுதும் வாய்ப்பை பெற்றார் கிருஷ்ணசாமி அவர்கள் மேலும் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை பார்த்த மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் அவரது ஆஸ்தான இயக்குனர்கள் இடம் தனது திரைப்படங்களில் கிருஷ்ணசாமியை பயன்படுத்தி கொண்டு அவரது வசனத்தில் பேசி நடித்தார்.
- சிவாஜி கணேசன் கூட்டணியில் வீரபாண்டிய கட்டபொம்மன், குங்குமம், கர்ணன், தங்கசுரங்கம், சொர்க்கம், தர்மம் எங்கே, பொன்னுஞ்சல், என்னைப்போல் ஒருவன், புண்ணிய பூமி திரைப்படங்கள் வெளிவந்ததை போல் எம்ஜிஆர் கூட்டணியில் பெரிய இடத்து பெண், பணக்கார குடும்பம், பணம் படைத்தவன், எங்க வீட்டு பிள்ளை, பறக்கும் பாவை போன்ற திரைப்படங்களில் வசனம் எழுதியுள்ளார்.
- இவர் எம்ஜிஆரை வைத்து இரட்டை வேடத்தில் நடித்த எங்க வீட்டு பிள்ளை திரைப்படத்திற்கு வசனம் எழுதியதை போல் பின்னாளில் சிவாஜி கணேசன் இரட்டை வேடத்தில் நடித்த என்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்கு பொறி தெறிக்கும் வசனம் எழுதினார்.
Remove ads
குறிப்பிடத்தக்க படங்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads