சந்தௌலி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்தௌலி (Chandauli), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பூர்வாஞ்சல் பிரதேசத்தில் அமைந்த சந்தௌலி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும் பேரூராட்சியும் ஆகும். இது உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு தென்கிழக்கில் 360.4 கிலோ சந்தௌலி மக்களவைத் தொகுதிமீட்டர் தொலைவிலும்; வாரணாசிக்கு தெற்கே 42.4 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரம் சந்தௌலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
Remove ads
மக்கள் தொகைப் பரம்பல்
2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15 வார்டுகளும், 3,520 குடியிருப்புகளும் கொண்ட சந்தௌலி பேரூராட்சியின் மக்கள் தொகை 23,020 ஆகும். அதில் 11,931 ஆண்கள் மற்றும் 11,089 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14.33% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 919 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 82.15% வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 20.23% மற்றும் 2.01% வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 87.16%, இசுலாமியர் 12.54% மற்றும் பிற சமயத்தினர் 0.29% வீதம் உள்ளனர்.[1] இந்நகர மக்கள் போச்புரி மொழி, இந்தி மொழி மற்றும் உருது பேசுகிறார்கள்.
Remove ads
போக்குவரத்து
நெடுஞ்சாலைகள்
தில்லி-கொல்கத்தா நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 19 சந்தௌலி நகரம் வழியாகச் செல்கிறது..
தொடருந்து நிலையம்
தில்லி-கொல்கத்தா நகரங்களை இணைக்கும் இருப்புப்பாதை சந்தௌலி-மச்வார் தொடருந்து நிலையம்[2] வழியாகச் செல்கிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads