சிவஞான முனிவர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிவஞான முனிவர் (1753 - 1785) [1]; திருநெல்வேலி, தமிழ்நாடு) ஒரு சைவ மெய்யியலாளர் ஆவார். இவர் தமிழ் மொழியிலும், சமசுகிருத மொழியிலும் சிறப்புப் பெற்றவர்.[2] ஆனந்தக் கூத்தர் – மயிலம்மை தம்பதிகளுக்கு மகனாகச் சைவ வேளாளர் குலத்தில் பிறந்தவர்.[3]முக்களாலிங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவர் , இளமையிலேயே துறவியானவர். வடமொழியும் தமிழ்மொழியும் நிகரானவை என்ற எண்ணம் கொண்டவர் என்பதால் சமசுகிருத நூல்கள் பலவற்றை தமிழுக்கு மொழி பெயர்த்தவர்.[4]
இவரை ஸ்ரீ மாதவச் சிவஞான முனிவர் என்றும் அழைப்பர். இவரை பிள்ளையார்பாளையம் செங்குந்தர் மரபினர் அதிகளவில் ஆதரித்தனர்.[5] இவர் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்தபொழுது பிள்ளையார்பாளையம் மணியப்ப முதலியார் அதிக அளவில் உதவி செய்தார்.[6]
Remove ads
இயற்றிய நூல்கள்
- தொல்காப்பிய பாயிர விருத்தி
- மாபாடியம்
- திருத்தொண்டர் திருநாமக்கோவை
- திருமுல்லைவாயில் அந்தாதி - 100 பாடல்களைக் கொண்ட நூல்
- குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி
- சோமேசர் முதுமொழி வெண்பா
- இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி
- திருவேகம்பரந்தாதி
- கச்சி ஆனந்த ருத்திரேசர் பதிகம்
- ஆனந்தக் களிப்பு
- காஞ்சி புராணம்
- முதற்காண்டம்
- கலைசைப் பதிற்றுப்பத்தாந்தாதி
- கலைசைப் செங்கழுநீர்
- விநாயகர் பிள்ளைத் தமிழ்
- அமுதாம்பிகைப் பிள்ளைத் தமிழ்
- அகிலாண்டேசுவரர் பதிகம்
Remove ads
மொழிபெயர்ப்புகள்
- சித்தாங்க பிரகாசிகை
- சுலோக பஞ்சகம்
- தருக்க சங்கிரகம்
- சிவதத்துவ விவேகம்
12 மாணவர்கள்
- திருதணிகைக் கச்சியப்ப முனிவர்
- தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர்
- காஞ்சிபுரம் சிதம்பர முனிவர்
- இலக்கணம் சிதம்பரநாத முனிவர்
- காஞ்சி முத்துக்குமாரதேசிகர்
- காஞ்சி சரவணபத்தர்
- இராமநாதபுரம் சோமசுந்தரப்பிள்ளை
- திருமுக்கூடல் சந்திரசேகர முதலியார்
- காவாந்தண்டலம் அடைக்கலங்காத்த முதலியார்
- கடம்பர்கோயில் கல்யாணசுந்தர உபாத்தியாயர்[7]
காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads