சுந்தரராஜபுரம் ஊராட்சி

இது தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது From Wikipedia, the free encyclopedia

Remove ads

சுந்தரராஜபுரம் ஊராட்சி (Sundararajapuram Gram Panchayat), தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.[6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4426 ஆகும். இவர்களில் பெண்கள் 2264 பேரும் ஆண்கள் 2162 பேரும் உள்ளனர்.

Remove ads

தொழில்

முதன்மைத் தொழில் விவசாயம். ஊர் மக்களில் பெரும்பாலனோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.

அமைவிடம்

சுந்தரராஜபுரம் கிராமம் இயற்கை அழகு பொருந்திய மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

அருகில் உள்ள ஊர்கள் - சேத்தூர், கிருஷ்ணாபுரம், இராஜபாளையம், சுந்தரநாச்சியார்புரம்

கல்வி நிலையங்கள்

  1. அரசு ஆ.தி.ந. தொடக்கப்பள்ளி, சுந்தரராஜபுரம்
  2. அரசு ஆ.தி.ந. உயர்நிலைப்பள்ளி, சுந்தரராஜபுரம்
  3. அபிநயா மழலையர் பள்ளி

அடிப்படை வசதிகள்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]

மேலதிகத் தகவல்கள் அடிப்படை வசதிகள், எண்ணிக்கை ...
Remove ads

சிற்றூர்கள்

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:

  1. சுந்தரராஜபுரம்
  2. அம்மன் நகர்

அருகில் உள்ள சுற்றுலா தளங்கள்

  1. அய்யனார் கோவில்,இராஜபாளையம் - மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் அய்யனார் அருவி அமைந்துள்ளது. இங்கு அய்யனார் கோவில் ஒன்றும் உள்ளது. இவ்விடம் மலையேறும் விளையாட்டுகளுக்கு தகுந்தது.
  2. சாஸ்தா கோவில், தேவதானம்
  3. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
  4. குற்றாலம்

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads