செயவர்மன் (சந்தேல வம்சம்)
சந்தேல அரசன் From Wikipedia, the free encyclopedia
Remove ads
செயவர்மன் (Jayavarman) (ஆட்சிக் காலம் கி.பி. 1110–1120 ) இந்தியாவின் சந்தேல வம்சத்தின் அரசனாவான். இவன் தனது தந்தையான சல்லக்சணவர்மனுக்குப் பிறகு செகசகபுக்தி பிராந்தியத்தின் (இன்றைய மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள புந்தேல்கண்ட்) ஆட்சியாளரானான். சந்தேலக் கல்வெட்டுகள் இவனைப் பற்றிய தெளிவற்ற புகழ்ச்சிகளை மட்டுமே கொண்டிருக்கின்றன. எனவே இவனது ஆட்சியைப் பற்றி சிறிய வரலாற்று தகவல்களே அறியப்படுகின்றன. இவன் தனது மாமா பிரிதிவிவர்மனுக்கு ஆதரவாக அரியணையைத் துறந்ததாகத் தெரிகிறது.
Remove ads
ஆரம்ப கால வாழ்க்கை
செயவர்மன், தனது முன்னோடியான சல்லக்சணவர்மனின் மகன் என மதனவர்மனின் மவு கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. [1] செயவர்மனைப் பற்றிய கிடைக்கக்கூடிய ஒரே கல்வெட்டு இவனது மூதாதையரான தங்கன் என்பவனால் வெளியிடப்பட்ட ஒரு கல்வெட்டுக்கு பிந்தைய கல்வெட்டு மட்டுமே. இப்போது கஜுராஹோவில் உள்ள விசுவநாதர் கோவிலின் தாழ்வாரத்தில் காணப்படும் இந்தக் கல்வெட்டு, " நிர்பதி செயவர்மன் -தேவன்" எழுத்துகளில் மீண்டும் எழுதியதாகக் கூறுகிறது. மறைமுகமாக அது தெளிவற்றதாகிவிட்டதாலோ அல்லது சேதமடைந்ததாலோ இருக்கலாம். கல்வெட்டில் அரசனின் வழக்கமான புகழே உள்ளது. மேலும் இவன் போர்களில் "மலை போன்ற பெரிய இளவரசர்களை" வேரோடு பிடுங்கிவிட்டதாகக் கூறுகிறது.[2]
இந்த கல்வெட்டு பொ.ச. 6 ஏப்ரல் 1117 தேதியிட்டது.[1] வேறு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், சல்லக்சணன் அரியணை ஏறியதை கி.பி 1100 என்று தேதியிட்டால், செயவர்மனின் ஆட்சி கிபி 1110 க்கு முந்தையது. ஒவ்வொரு தலைமுறைக்கும் 10 ஆண்டுகள் எனக் கருதலாம். [3]
Remove ads
துறவு
செயவர்மன் ஆட்சியில் சோர்வுற்று அரியணையைத் துறந்ததாகக் கலிஞ்சர் கல்வெட்டு கூறுகிறது. நாராயணனின் பக்தனான இவன், தனது பாவங்களைக் கழுவுவதற்காக "தெய்வீக நதிக்கு" சென்றான். இவனுக்குப் பிறகு இவனது மாமா பிருதிவிவர்மன் ஆட்சிக்கு வந்ததால், இவன் வாரிசு இல்லாமல் இறந்துவிட்டதாகத் தெரிகிறது.[4] பிருதிவிவர்மனின் வாரிசான மதனவர்மனின் நன்யௌரா செப்புத் தகடு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேல மரபியல், செயவர்மன் மற்றும் அவனது தந்தை சல்லக்சணவர்மன் ஆகியோரின் பெயரைத் தவிர்க்கிறது.[3]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads