செ. கோ. விசுவநாதன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

செ. கோ. விசுவநாதன் (C. G. Viswanathan)(பிறப்பு மார்ச்சு 9, 1933) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நகரம் அழகேசன் நகர்ப் பகுதியினைச் சார்ந்தவர். செங்கல்பட்டு தூய கொலம்பசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். விசுவநாதன் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். 1970 ஆம் ஆண்டு முதல் திருக்கழுகுன்றம் ஊராட்சித் தலைவராகவும், 1957 முதல் 1961 ஆம் ஆண்டு வரை செங்கல்பட்டு நகராட்சி உறுப்பினராகவும் இருந்துள்ளார். 1962, 1967 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[1]

விரைவான உண்மைகள் செ. கோ. விசுவநாதன், சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் ...
Remove ads

சட்டமன்ற உறுப்பினராக

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்ற தொகுதி ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads