சோம்நாத் சர்மா

From Wikipedia, the free encyclopedia

சோம்நாத் சர்மா
Remove ads

மேஜர் சோம்நாத் சர்மா (Somnath Sharma), PVC (31 சனவரி 1923 – 3 நவம்பர் 1947), போரில் வீர தீரச் செயல்கள் புரியும் இந்திய இராணுவத்தினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான பரம் வீர் சக்கரம் விருதை பெற்ற முதல் இந்திய இராணுவ அதிகாரி ஆவார்.[2]இவரது சகோதரர்கள் மேஜர் ஜெனரல் விஷ்வநாத் சர்மா மற்றும் லெப். ஜெனரல் சுரேந்திரநாத் சர்மா ஆவர்.

விரைவான உண்மைகள் மேஜர்சோம்நாத் சர்மா பரம வீர சக்கரம், பிறப்பு ...
Thumb
புது தில்லி தேசிய போர் நினைவகத்தில் சோம்நாத் சர்மாவின் மார்பளவுச் சிற்பம்
Thumb
தேசிய போர் நினைவகத்தில் மேஜர் சோம்நாத்தின் பெயர் பொறித்த பலகை

நவம்பர் 1947- இந்திய-பாகிஸ்தான் போரின் போது, சிறீநகர் விமான நிலையத்திற்குள் ஊடுருவிய பாகிஸ்தான் படையினரை எதிர்த்துப் போராடி விரட்டி அடித்தார். மேலும் பாகிஸ்தான் படைகளுக்கு எதிராக நடைபெற்ற பட்காம் சண்டையின் போது, பாகிஸ்தானின் பழங்குடியினப் படைவீரர்களை எதிர்த்துப் போராடி, காஷ்மீரில் ஊடுருவதை தடுத்து நிறுத்திய போது, சோம்நாத் சர்மா வீர மரணமடைந்தார். இவரது இறப்பிற்கு 21 சூன் 1950-இல் சோம்நாத் சர்மாவிற்கு பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது.[3] [4] மேஜர் சோம்நாத் சர்மாவின் சகோதரரின் மாமியாரான சாவித்திரி கனோல்கர் என்பவரே பரம் வீர் சக்கரம் விருதினை வடிவமைத்தவர் ஆவார். [5][6]

Remove ads

பரம் வீர் விருது பெற்றவர்கள்

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads