தியாகவிடங்கர் (கதைமாந்தர்)

பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரம் From Wikipedia, the free encyclopedia

தியாகவிடங்கர் (கதைமாந்தர்)
Remove ads

தியாகவிடங்கர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற கோடிக்கரை கலங்கரை விளக்கினை பராமரிப்பு செய்கின்றவர். மேலும் பூங்குழலி, முருகய்யன் ஆகியோரின் தந்தையும், ராக்கம்மாளின் மாமனாரும் ஆவார்.

விரைவான உண்மைகள் தியாகவிடங்கர், முதல் தோற்றம் ...
Remove ads

கதாப்பாத்திரத்தின் இயல்பு

கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தில், கலங்கரை விளக்கத்தைப் பராமரிக்கும் பணியின் நிமித்தமாக கோடிக்கரையில் வசிப்பவர் தியாகவிடங்கர். இவர் பூங்குழலி மற்றும் முருகய்யனின் தந்தையாவார். பழுவூர் இளையராணி நந்தினிதேவியின் உத்தரவினால் இருவர் ஈழத்திற்கு செல்வதற்காக முருகய்யனை படகோட்ட அழைத்துச் சென்றுவிட்டனர். அடுத்து பழையாறை இளவரசி குந்தவை நாச்சியாரின் ஓலையுடன் வந்திருந்த வல்லவரையன் வந்தியத்தேவன் ஈழத்திற்கு செல்ல படகோட்டும் நபர்கள் யாருமில்லை. என்பதை அறிகிறான். அப்போது வந்தியத்தேவனிடம் பூங்குழலியைப் போல படகோட்டுபவர் யாருமில்லை, ஆனால் அவள் சம்மதத்தினைப் பெற சிறிது கனிவுடனும் கவனுத்துடனும் அணுக வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார் தியாகவிடங்கர். அதன்படியே அவளைச் சம்மதிக்க வைத்து ஈழத்தினை அடைகிறான் வந்தியத் தேவன்.

Remove ads

நூல்கள்

தியாகவிடங்கரை கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.

இவற்றையும் பார்க்கவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads