திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia

திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்
Remove ads

திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில் (Amritaghateswarar-Abirami Temple) என்பது சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 47ஆவது சிவத்தலம் ஆகும். அமிர்தமே லிங்கமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இது குங்கிலியக்கலய நாயனார், காரி நாயனார் வாழ்ந்த தலம். அபிராமி அந்தாதி பாடப்பட்டதும் இத்தலத்திலேயாகும். இத்தலத்தில் இறைவன் மார்க்கண்டேயருக்காக எமனை உதைத்தருளினார் என்பது தொன்நம்பிக்கை

விரைவான உண்மைகள் தேவாரம், அபிராமி அந்தாதி பாடல் பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில், புவியியல் ஆள்கூற்று: ...
Remove ads

அமைவிடம்

இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை–தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மி. தூரத்தில் திருக்கடையூர் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 30 கி.மி. தொலைவில் சீர்காழி–நாகப்பட்டினம் சாலை வழியில் இத்தலம் உள்ளது.

இறைவன், இறைவி

  • இக்கோயிலில் உள்ள இறைவன் அமிர்தகடேசுவரர், இறைவி அபிராமி தேவி.
  • மேலும் இத்திருத்தலத்தில் இறைவி அபிராமி தேவி என்ற பெயரால் வணங்கபடுகிறாள்.
  • அதற்கு உதாரணமாக மற்ற திருத்தலத்தில் இறைவி " வல்லி ", " அம்மன் " போன்று அல்லாமல் கன்னியாஸ்திரியாக " அபிராமி தேவி " ஆக அபிராம பட்டர் அருள்கினங்க சரஸ்வதி தேவியின் ஞானசொருப நிலையில் காட்சியளிக்கிறாள்.
  • அதனால் இத்தல இறைவியான " அபிராமி தேவி " வணங்குவதன் மூலம் உயர் ஞானம், கல்வி மேலான அறிவு சார் வழிபாட்டிற்கு உகந்த இறைவியாக அருள் பாலித்து வணங்க செய்கிறாள்.
Remove ads

வழிபட்டோர்

அகத்தியர், புலஸ்தியர், துர்க்கை, வாசுகி, பூமி தேவி முதலானோர் வழிபட்ட திருத்தலம். மார்க்கண்டேயர் வழிபட்ட சிவத்தலங்களுள் இத்தலம் 108 வதாகவும், அருகிலுள்ள திருக்கடவூர் மயானம் 107 வதாகவும் அமைகின்றன.

தல வரலாறு மற்றும் இறைவனின் சாதனைகள்

Thumb
(திருக்கடவூர் அபிராமி–அமுதகடேசுவரர் கோயிலின் வாசல் உள் பிரகாரம்)
  • இத்தலத்தில் மார்க்கண்டேயனின் ஆயுட்காலம் நிறைவடைய அவனது உயிரை பறிக்கும் பொருட்டு வந்த கலனை (இஎமன்) பாசக்கயிற்றால் துரத்த உடனே மார்க்கண்டேயன் சிவபெருமானான அமிர்தலிங்கத்தை கட்டி அனைத்து கொள்ள இயமனின் பாசக்கயிறு சிவபெருமானின் லிங்கத்தின் மீது விழ கோபமுற்ற சிவன் உருவமாக வடிவெடுத்து இயமனை தனது காலால் உதைத்து நெற்றி கண்ணில் எறித்து அவனை கொன்றுவிட அதன் பிறகு மார்கண்டேயன் உயிர் நீடித்தான் என்பது இத்தல வரலாறும் இறைவனின் சாதனை ஆகும்,
  • அதனாலே இத்தலத்தில் மணிவிழா, பவளவிழா, சதாபிஷேகம் ஆகிய விழாக்களை பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.[1]
  • மேலும் தை அமாவாசை திதியை அம்பிகையின் முக அழகை தரிசித்துக் கொண்டிருந்த அபிராமி பட்டர் பௌர்ணமி என்று தவறாக சரபோஜி மன்னரிடம் சொல்ல, அதனால் கோபமுற்ற மன்னரிடம் இருந்து காக்கும்படிக்கு அபிராமி அந்தாதி பாடி அமாவாசையை பௌர்ணமியாக மன்னருக்கு மாற்றிக் காட்டிய அற்புதம் நிகழ்ந்த தலம் ஆகும்.[2]
  • மேலும் இங்கு நவக்கிரக சந்நிதி இல்லாதது சிறப்பாகக் கூறப்படுகிறது.
Remove ads

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

படத்தொகுப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads