திருச்செந்தூர் நாழிக்கிணறு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வார்ப்புரு:Infobox Theertham திருச்செந்தூர் நாழிக்கிணறு என்பது தமிழகத்திலுள்ள மிகவும் புண்ணியமான தீர்த்தம் ஆகும்.இது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலுள்ளது.இது திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் அமைந்துள்ள தீர்த்தங்களுள் ஒன்றாகும்.இந்த தீர்த்தத்தில் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கானோர் நீராடுகின்றனர்.

இருப்பிடம்

தூத்துக்குடியிலிருந்து தெற்கே 37 கி.மீ தொலைவிலும்,மதுரையிலிருந்து 180 கி.மீ தொலைவிலும் திருநெல்வேலியிலிருந்து 60 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தெற்கே வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது.

தோற்றக் கதை

சூரபதுமன் என்ற அசுரனை அழிப்பதற்காக முருகப்பெருமான் தன் படைகளுடன் திருச்செந்தூரில் முகாமிட்டு இருந்தார்.அப்பொழுது படைவீரர்களின் தாகத்தினை தீர்ப்பதற்காக தன் வேலினால் இந்த கிணற்றை உருவாக்கியதாக புராணங்கள் கூறுகின்றன்.

சிறப்பு

இந்த தீர்த்தம் கடலுக்கு மிக அருகில் இருந்தாலும் இதன் நீர் இனிப்பு சுவை கொண்டுள்ளது.மேலும் இது அள்ள அள்ள குறையாத நீர்நிலையாகவும் திகழ்கிறது.

அறிவியல் விளக்கம்

கடற்கரையின் நிலப்பரப்பிற்கு அடியிலுள்ள நீர் கடல் மண்ணிணால் வடிகட்டப்பட்டு உவர்ப்பு நீங்கி இனிப்பு சுவையுடன் உருவெடுக்கிறது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads