திருவேற்காடு

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

திருவேற்காடுmap
Remove ads

திருவேற்காடு (ஆங்கிலம்:Tiruverkadu) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தின், பூந்தமல்லி வட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும். இது வடமேற்கு சென்னையின் ஒரு முக்கியமான புறநகர் மற்றும் வளர்ந்துவரும் குடியிருப்புப் பகுதியாகும்.

விரைவான உண்மைகள்
Remove ads

மக்கள் வகைப்பாடு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 19 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 15,863 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 62,824 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 84% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 977 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7189 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 988 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 14,360 மற்றும் 235 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.95%, இசுலாமியர்கள் 1.4%, கிறித்தவர்கள் 5.13% , தமிழ்ச் சமணர்கள் .04%, மற்றும் பிறர் 0.47% ஆகவுள்ளனர்.[4]

Remove ads

திருத்தலங்கள்

தேவாரப்பாடல் பெற்ற திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் மற்றும் திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் ஆகியவை திருவேற்காட்டில் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads