நாட்டார்மங்கலம்

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

நாட்டார்மங்கலம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தின் நாட்டார்மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2]

விரைவான உண்மைகள் நாட்டார்மங்கலம், நாடு ...

கடலூர் மாவட்டத்தில் உள்ள மாதிரி கிராமங்களில் ஒன்றாக இக்கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நாட்டார்மங்கலத்தின் வடக்குப்பகுதியில் இருந்து வீராணம் ஏரியின் எல்லை விரிந்திருக்கிறது.[3]

Remove ads

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 34.52 மீ. உயரத்தில், (11.2780°N 79.5329°E / 11.2780; 79.5329) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு நாட்டார்மங்கலம் அமையப் பெற்றுள்ளது.

Thumb
நாட்டார்மங்கலம்
நாட்டார்மங்கலம்
நாட்டார்மங்கலம் (தமிழ்நாடு)

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், ஊரின் மொத்த மக்கள்தொகை 2,151 பேர் ஆகும். இதில் 1,068 பேர் ஆண்கள் மற்றும் 1,083 பேர் பெண்கள் ஆவர்.[4]

சமயம்

இந்துக் கோயில்

கைலாசநாதர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று நாட்டார்மங்கலம் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது .[5]

அரசியல்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் (சட்டமன்றத் தொகுதி)க்குட்பட்ட ஊராட்சி நாட்டார்மங்கலம் ஆகும். மேலும் இப்பகுதி, சிதம்பரம் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[6]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads