நாட்டார்மங்கலம்
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாட்டார்மங்கலம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தின் நாட்டார்மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2]
கடலூர் மாவட்டத்தில் உள்ள மாதிரி கிராமங்களில் ஒன்றாக இக்கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நாட்டார்மங்கலத்தின் வடக்குப்பகுதியில் இருந்து வீராணம் ஏரியின் எல்லை விரிந்திருக்கிறது.[3]
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 34.52 மீ. உயரத்தில், (11.2780°N 79.5329°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு நாட்டார்மங்கலம் அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், ஊரின் மொத்த மக்கள்தொகை 2,151 பேர் ஆகும். இதில் 1,068 பேர் ஆண்கள் மற்றும் 1,083 பேர் பெண்கள் ஆவர்.[4]
சமயம்
இந்துக் கோயில்
கைலாசநாதர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று நாட்டார்மங்கலம் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது .[5]
அரசியல்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் (சட்டமன்றத் தொகுதி)க்குட்பட்ட ஊராட்சி நாட்டார்மங்கலம் ஆகும். மேலும் இப்பகுதி, சிதம்பரம் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[6]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads