நிர்மலா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிர்மலா (Nirmala) என்பது துறவிகளின் சீக்கிய மரபாகும் . [1] பாரம்பரிய நம்பிக்கைகளின்படி, 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குரு கோபிந்த் சிங் என்பவரால் நிர்மலா சீக்கிய பாரம்பரியம் நிறுவப்பட்டது. சமசுகிருதம் மற்றும் இந்து மத நூல்களைக் கற்க ஐந்து சீக்கியர்களை வாரணாசிக்கு அனுப்பியபோது இது அமைக்கப்பட்டது. [2] [3] டபிள்யு.எச். மெக்லியோட் என்பவரின் கூற்றுப்படி, இந்த நம்பிக்கை சந்தேகத்திற்குரிய வரலாற்றுத் தன்மை வாய்ந்தது. ஏனெனில் இதுபற்றி 19 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் சீக்கிய இலக்கியங்களில் "அரிதாகவே குறிப்பிடப்பட்டுள்ளன". [4]

நிர்மலா சீக்கியர்கள் ஓச்சர் நிற ஆடைகளை (அல்லது குறைந்தது ஒரு பொருளை) அணிந்துகொண்டு (கேஷ் ) அவிழாத கூந்தலை வைத்திருப்பார்கள். இவர்கள் இந்து சந்நியாசிகளின் அதே பிறப்பு மற்றும் இறப்பு சடங்குகளை கடைபிடிக்கின்றனர். மேலும் அரித்துவாரில் அகாரா (தற்காப்பு அமைப்பு), மற்றும் பஞ்சாபில் (இந்தியா) பல தேரர்கள் உள்ளனர். [5] கும்பமேளா ஊர்வலத்தில் இவர்களும் பங்கேற்று வருகின்றனர். [6] [7] இவர்கள் ஆரம்பகால தொண்டு நிறுவனர்களாக இருந்தனர். இவர்கள் சீக்கிய மதத்தை மக்களிடையே பரப்பி, [4] சீக்கிய மதத்தின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்களிப்பை வழங்கினர். [8] இவர்கள் பெரும்பாலும் 18 ஆம் நூற்றாண்டில் சீக்கிய கோவில்களில் (குருத்வாராக்கள்) தலைவர்களில் ஒருவராக பணியாற்றியுள்ளனர். [9] நிர்மலர்கள் சீக்கிய இலக்கியங்களை வேதாந்த சொற்களில் விளக்குகிறார்கள். [3] 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் சிங் சபா இயக்கத்தின் போது, இவர்கள் சீக்கியர்களின் தத் கல்சா பிரிவினரால் கண்டனம் செய்யப்பட்டனர். மேலும் சனாதன் சீக்கிய பிரிவினரால் ஆதரிக்கப்பட்டனர்.
Remove ads
தோற்றம்
நிர்மலர்களின் தோற்றம் நிச்சயமற்றது. குஷ்வந்த் சிங் மற்றும் பிற வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, குரு கோபிந்த் சிங் காலத்தில், 17 ஆம் நூற்றாண்டின் கடைசி தசாப்தத்தில், சீக்கிய இலக்கியங்களில் இந்த பிரிவு முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிர்மல் பந்த் பர்திப்காவின் கூற்றுப்படி, நிர்மலா பாரம்பரியம் சீக்கிய மதத்தின் ஆரம்ப வரலாற்றில் வேர்களைக் கொண்டுள்ளது. [10] 19 ஆம் நூற்றாண்டில், சில நிர்மலா அறிஞர்கள் முதல் சீக்கிய குருவான குரு நானக் காலத்தை கண்டுபிடித்தனர். ஆனால் குஷ்வந்த் சிங் போன்ற சிலர் நிர்மலா பாரம்பரியம் கடைசி சீக்கிய குருவான கோபிந்த் சிங் அவர்களால் நிறுவப்பட்டது என்று கூறுகின்றனர். [11]
நிர்மலர்களின் கூற்றுப்படி, 1686 ஆம் ஆண்டில், குரு கோபிந்த் சிங் சமசுகிருதம் மற்றும் மாரம்பரிய இந்து இலக்கியங்களைக் கற்க ஐந்து சீக்கியர்களை (பிர் சிங், காந்தா சிங், கரம் சிங், ராம் சிங் மற்றும் சாய்னா சிங் வாரணாசிக்கு அனுப்பினார். இது நிர்மலா பாரம்பரியத்தைத் தொடங்கியது. [11] [12] அவர்கள் ஆனந்த்பூருக்குத் திரும்பிய பிறகு, நிர்மலா ("தூய" அல்லது "ஆதரவற்ற" என்பதற்கு சமஸ்கிருதம்) என்ற தலைப்பால் கௌரவிக்கப்பட்டனர். [13] நிர்மலர்கள் அம்ரித் தீட்சையை கல்சா பாரம்பரிய பாதைக்குள் கொண்டு சென்றனர். [14]
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிர்மலா அறிஞரும் தத் கல்சா ஆதரவாளருமான கியானி கியான் சிங் என்பவரால் நிர்மல் பந்த் பர்திபிகாவில் காணப்பட்ட மற்றொரு கணக்கின் படி, குரு கோபிந்த் சிங் 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பண்டிட் ரகுநாத் என்ற சமசுகிருத அறிஞரை சந்தித்தார். சீக்கியர்களுக்கு சமசுகிருதம் கற்பிக்கும்படி கேட்டார். இருப்பினும், சூத்திரர்களுக்கு சமசுகிருதம் கற்பிக்க விரும்பாததால் ரகுநாத் பணிவுடன் அதை செய்ய மறுத்துவிட்டார். எனவே குரு கோபிந்த் சிங் உயர் சாதி உடையணிந்த சில சீக்கியர்களை வாரணாசிக்கு அனுப்பினார். அங்கு அவர்கள் இந்திய இறையியல் மற்றும் தத்துவத்தின் திறமையான அறிஞர்களாக மாறினர். [7] கியானி கியான் சிங்கின் பண்டிட் ரகுநாத் தொடர்பான கதை வரலாற்று புனைகதையாகும். [15]
இந்த கணக்கின் வரலாற்றுத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது, ஏனெனில் 19 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் நிர்மலர்களைப் பற்றி மிகக் குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. [16] [17] பசௌரா சிங் மற்றும் லூயிஸ் ஈ பெனெக் ஆகியோர் நிர்மலர்கள் பின்னர் தோன்றியவர்கள் அல்லது உதாசிகளிடமிருந்து வந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். அவர்கள் சந்நியாசி வாழ்க்கை முறை, பிரம்மச்சரியம் மற்றும் சீக்கிய தத்துவத்தின் வேதாந்த விளக்கம் ஆகியவற்றில் ஒத்தவர்கள். [18]
Remove ads
வரலாறு

சீக்கிய பிரபுக்களிடமிருந்து, குறிப்பாக புல்கியன் மாநிலங்களின் ஆட்சியாளர்களிடமிருந்து கிடைத்த ஆதரவு, நிர்மலர்கள் ஒரு முக்கிய மத ஒழுங்காக மாற உதவியது. [19] ஷாபாத்தைச் சேர்ந்த சர்தார் தியான் சிங் தனது தோட்டத்தை கரம் சிங் நிர்மலாவிடம் வழங்கினார். 1766 ஆம் ஆண்டில், பகிர்வாலாவைச் சேர்ந்த சதா சிங் பகத் சிங் நிர்மலாவுக்கு ஏழு கிராமங்களை வழங்கினார். ஆனால் பிந்தையவர்கள் இந்த வாய்ப்பை மறுத்துவிட்டனர். சர்தார் ஜெய் சிங்கின் மருமகள் காங்கலில் நிர்மல் தேராவுக்கு இரண்டு கிராமங்களை வழங்கினார். [20]
பாங்கி மிஸ்லின் சர்தார் காந்தா சிங் 13 கிராமங்களை ஜெய் சிங் நிர்மலாவுக்கு வழங்கினார். 1796 ஆம் ஆண்டில், மகாராஜா ரஞ்சித் சிங் நிஹால் சிங் நிர்மலாவுக்கு நிலத்திற்கான பத்திரத்தை வழங்கினார். இரண்டு சந்தர்ப்பங்களிலும், நிர்மலர்கள் அந்த சொத்துக்களை சந்தோக் தாஸின் உதாசி அகாராவுக்கு வழங்கினர். [21]
Remove ads
தத்துவம் மற்றும் நடைமுறைகள்
உதாசிகளைப் போலவே, நிர்மலர்களும் சீக்கிய குருக்களின் போதனைகளை வேதாந்தத்தின் சூழலில் விளக்குகிறார்கள். [22] முதல் சீக்கிய குரு,வான குருநானக்கை, ஒரு அத்வைத வேதாந்தியவாதியாகவும், சங்கரரைப்ரைப் பின்பற்றுபவராகவும், இந்து சமயத்தின் பாதுகாவலராகவும் பார்க்கிறார்கள். [23]
இருப்பினும், உதாசிகளுடன் ஒப்பிடும்போது, நிர்மலர்கள் பிரதான கல்சா சீக்கியர்களுடன் நெருக்கமான உறவைப் பகிர்ந்துள்ளனர். பல முக்கிய நிர்மலா சாந்தர்கள் பஞ்சாபில் பிரதான சீக்கிய மதத்தைப் பரப்பினர். மேலும் சீக்கியர்களுக்கு பயிற்சியளிப்பதில் நிர்மலா அகாரர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். ஆனால் அகாலி இயக்கத்திற்குப் பிறகு, இந்துக்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு சீக்கிய அடையாளத்தை உருவாக்க கல்சா முயற்சிப்பது கல்சா-நிர்மலா உறவை பலவீனப்படுத்தியது. [24]
இடங்கள்
புல்கியன் மாநிலங்களின் ஆட்சியாளர்களின் மானியங்களுடன் நிறுவப்பட்ட காங்கலில் உள்ள நிர்மலா பஞ்சதி அகாரா, அனைத்து நிர்மலா வாழ்க்கையிலும் மிக உயர்ந்த அந்தஸ்தைக் கொண்டுள்ளது. [25] பிற முக்கிய நிர்மலா மையங்கள் அரித்வார், அலகாபாத், உஜ்ஜைன், திரிம்பக், குருசேத்திரம் மற்றும் பாட்னாவில் அமைந்துள்ளன .
குறிப்பிடத்தக்க நிர்மலர்கள்
- காவி சந்தோக் சிங், (1787 - 1843), சூரஜ் பிரகாஷின் வரலாற்று எழுத்தாளர்
- கெய்னி கியான் சிங், (1822-1921), மிக முக்கியமான நிர்மலர்
- பண்டிட் தாரா சிங் (1822-1891), பஞ்சாபி மற்றும் சமசுகிருத அறிஞர்
- பல்பீர் சிங் சீக்வால், பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர்.
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads