நீர் வேளாண்மை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நீர் வேளாண்மை எனப்படுவது, கடல் உணவுகளான மீன், இறால், நண்டு, கணவாய், மட்டி போன்ற கடல்வாழ் விலங்குகள் மற்றும் கடல்களை போன்ற பாசிகளான நீர்வாழ் தாவரங்களை உள்ளடக்கிய நீர் வாழ் உயிரினங்களை வேளாண்மை செய்தலைக் குறிக்கும்[1][2]. இது நன்னீரிலோ, உப்பு நீரிலோ கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் செய்யப்படும் நீர்வாழ் உயிரினங்களின் வளர்ப்பையே குறிப்பதாகும். மாறாக கடலில் சென்று மீன் பிடித்தலை மேற்கொள்ளும் வணிக ரீதியான மீன் பிடித்தொழில் இந்த நீர் வேளாண்மைக்குள் அடங்குவதில்லை[3]. இயற்கையான கடல் சூழலிலேயே தடைகளை இட்டு இந்த நீர்வேளாண்மை மேற்கொள்ளப்படுமாயின் அது, கடல் நீர் வேளாண்மை எனப்படும்.
அலங்காரத்திற்கென வளர்க்கப்படும் மீன்களை வேளாண்மை செய்தலும் நீர் வேளாண்மை என்று அழைக்கப்படுவதுண்டு.

Remove ads
ஒப்பிட்டறிக
அடிக்குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads