நெஞ்சம் மறப்பதில்லை

ஸ்ரீதர் இயக்கத்தில் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

நெஞ்சம் மறப்பதில்லை
Remove ads

நெஞ்சம் மறப்பதில்லை 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கல்யாண் குமார், தேவிகா, நம்பியார், நாகேஷ், மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] ஸ்ரீதரின் தம்பி சி.வி. ராஜேந்திரன் இத்திரைப்படத்தின் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.[1] இத்திரைப்படம் மறுபிறப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.[2] இக்கதை செய்திகளில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.[1]

விரைவான உண்மைகள் நெஞ்சம் மறப்பதில்லை, இயக்கம் ...
Remove ads

நடிப்பு

இசை

இத்திரைப்படத்தின் இசை, விஸ்வநாதன், ராமமூர்த்தி. பாடல்களை டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீநிவாஸ், எஸ். ஜானகி, பி. சுசீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி பாடியுள்ளனர். இத்திரைப்படத்தில் வரும், ‘நெஞ்சம் மறப்பதில்லை’[3] மற்றும் ‘அழகுக்கும் மலருக்கும்,’ பாடல்கள் மிகவும் பிரபலம்.[1] இத்திரைப்படத்தின் பாடல் வரிகளை கண்ணதாசன் மற்றும் பஞ்சு அருணாசலம் எழுதியுள்ளனர்.

வரவேற்பு

நெஞ்சம் மறப்பதில்லை தமிழ்த் திரைப்படங்களில் உன்னதமானதாகக் கருதப்படுகிறது.[4][5][6]

மறு ஆக்கம்

2013-ம் ஆண்டு இத்திரைப்படத்தின் மறு ஆக்க உரிமையை இயக்குநர் செல்வராகவன் வாங்கியுள்ளார்.[5]

குறிப்புகளும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads