பண்ணைக்காடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பண்ணைக்காடு (ஆங்கிலம்:Pannaikadu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
Remove ads
அமைவிடம்
மேற்கு தொடர்ச்சி மலையின், பழனி மலையின் கீழ்ப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் கொடைக்கானலிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 8,731 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 32 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது.[3] பண்ணைக்காடு பேரூராட்சி பழனி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,493 வீடுகளும், 8,731 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 83.2% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,018 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,063 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,182 மற்றும் 607 ஆகவுள்ளனர்.[4]
Remove ads
முக்கிய பயிர்கள்
இந்த மலைக் கிராமத்தில் காபி, வாழை, பலா, மிளகு, ஆகிய பணப்பயிர்கள் அதிக அளவிலும், பூண்டு, முள்ளங்கி, கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, ஆரஞ்சு பழங்கள் அதிகமாக விளைகின்றன.
ஆதாரங்கள்
வெளி இணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads