பாரா மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாரா மாவட்டம் (Bara District) (நேபாளி: बारा जिल्ला ⓘ) தென் கிழக்கு நேபாள நாட்டின் தெராய் சமவெளியில், மாநில எண் 2-இல் உள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றாக பாரா மாவட்டம் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் கலையா நகரம் ஆகும். நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும்.

இம்மாவட்டத்தின் தெற்குப் பகுதி இந்தியாவின் பிகார் மாநிலத்தை எல்லையாகக் கொண்டது.
பாரா மாவட்டத்தின் பரப்பளவு 1,190 சதுர கிலோ மீட்டராகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுபின் படி பாரா மாவட்டத்தின் மக்கள் தொகை 6,87,708 ஆகும்.[1] பகையா, ஜமுனியா, பாசஹா, துத்தௌரா மற்றும் பங்காரி இம்மாவட்டத்தில் முக்கிய ஆறுகள் ஆகும். இம்மாவட்டத்தில் போஜ்புரி மொழி (72%), மைதிலி மொழி (9.7%), நேபாள மொழி (18.3%) மற்றும் பஜ்ஜிகா மொழிகள் பேசப்படுகிறது.
Remove ads
வேளாண்மை
இம்மாவட்டம் தராய் நேபாளத்தின் சமவெளியில் அமைந்திருப்பதால் கோதுமை, சோளம், காய்கறிகள், உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், காரட், காலிபிளவர், பீட்ரூட், மிளகாய், கொத்தமல்லி, முட்டைக்கோஸ் போன்றவைகள் நன்கு விளைகின்றன.
திருவிழா
காத்திமாய் கோயிலில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காத்திமாய் திருவிழாவின் போது ஆடு, கோழி போன்ற விலங்குகள் அம்மனுக்கு பலியிடப்படுகிறது.[2][3]
புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
கிராம வளர்ச்சி சபைகள் மற்றும் நகராட்சிகள்

பாரா மாவட்டம் 107 கிராம வளர்ச்சி சபைகள் கொண்டது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads