பாலசுப்பிரமணியம் (ஒளிப்பதிவாளர்)

ஒளிப்பதிவாளர் From Wikipedia, the free encyclopedia

பாலசுப்பிரமணியம் (ஒளிப்பதிவாளர்)
Remove ads

கே. டி. பாலசுப்ரமணியம் (Balasubramaniem, பிறப்பு 18 ஆகத்து 1966) என்பவர் ஓர் இந்திய ஒளிப்பதிவாளர் ஆவார்.[1][2] இவர் பி. சி. ஸ்ரீராமின் உதவியாளராக சுமார் 5 ஆண்டுகள் தேவர் மகன், திருடா திருடா, குருதிப்புனல் போன்ற விருது பெற்ற படங்களில் பணியாற்றினார்.[3]

விரைவான உண்மைகள் பாலசுப்பிரமணியம், பிறப்பு ...
Remove ads

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

பாலசுப்ரமணியம் தமிழ்நாட்டின் காரைக்குடியில் பிறந்தார். அங்கு இவர் தனது ஆரம்ப பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் இவர் திருப்பத்தூருக்கு குடிபெயர்ந்தார். அங்கு இவர் தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு, திருப்பத்தூர் ஏ.பி.எஸ்.ஏ கல்லூரிக்கு சென்றார். இவர் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இ. மாலாவை மணந்தார். இந்த இணையருக்கு கவின், கருண் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

தொழில்

இவரது முதல் படம் இரணியன் ஆகும். அது சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்திய வரலாற்று நாடகத் திரைப்படமாகும். பின்னர் இயக்குநர் பாலாவின் பிதாமகன் மற்றும் 180 ஆகிய படங்களில் பணியாற்றினார்.

தேவர் மகன் (1992), திருடா திருடா (1993), குருதிப்புனல் (1995) போன்ற விருது பெற்ற படங்களில், பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் சுமார் 5 ஆண்டுகள் உதவியாளராக பணிபுரிந்து அதன் வழியாக பாலசுப்ரமணியம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

Remove ads

திரைப்படவியல்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads