பாளையம் (திண்டுக்கல்)

இது தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஓர் பேரூராட்சி ஆகும் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பாளையம் (ஆங்கிலம்:Palayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 15,336 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 25.10 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இது வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

விரைவான உண்மைகள்
Remove ads

அமைவிடம்

பாளையம் பேரூராட்சி, திண்டுக்கல் மாவட்டத் தலைமையிடமான திண்டுக்கல்லிருந்து 40 கி.மீ. தொலைவிலும்; கரூரிலிருந்து 35 கி.மீ தொலவிலும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,686 வீடுகளும், 15,336 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 71.9% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 988 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 895 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,525 மற்றும் 1 ஆகவுள்ளனர்.[5]

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads