பிஜாவர் சமஸ்தானம்

From Wikipedia, the free encyclopedia

பிஜாவர் சமஸ்தானம்
Remove ads

பிஜாவர் சமஸ்தானம் (Bijawar State),1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் பிஜாவர் நகரம் ஆகும். இது தற்கால மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் தெற்கில் அமைந்த சிந்த்வாரா மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது.[1] 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பிஜாவர் சமஸ்தானம் 2520 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 1,10,500 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .

விரைவான உண்மைகள்
Remove ads

வரலாறு

17-ஆம் நூற்றாண்டில் பிஜாவர் இராச்சியத்தை நிறுவியவர் இராஜபுத்திர குலத்தின் பிஜய் சிங் ஆவார். மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த பிஜாவர் சமஸ்தானம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர், 27 மார்ச் 1811 அன்று பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற பிஜாவர் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். பிஜாவர் சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி பிஜாவர் சமஸ்தானம் 1 சனவரி 1950 அன்று விந்தியப் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, பிஜாவர் சமஸ்தானம் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads