பிரபாச பட்டினம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரபாச பட்டினம் அல்லது சோமநாதபுர பட்டினம் (Prabhas Patan or Somnath Patan), என்று அழைக்கப்படும் இக்கடற்கரை நகரம், குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிர தீபகற்ப பகுதியில், கிர்சோம்நாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரத்தில் சோதிர்லிங்க கோயிலான சோமநாதர் கோயில் அமைந்துள்ளது. கிர்சோம்நாத் மாவட்ட தலைமையகமான வேராவல் நகரிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் அரபுக் கடல் ஒட்டி உள்ளது. இந்நகரம் இந்து புனித தலங்களில் ஒன்று.[1]

அருச்சுனன் தீர்த்த யாத்திரையின் போது ஸ்ரீகிருஷ்ணரை பிரபாச பட்டினத்தில் சந்தித்து, சுபத்திரையை மணந்தார். ஸ்ரீகிருஷ்ணர், தமது அவதார முடிவு நெருங்கும் நேரத்தில் பிரபாச பட்டினத்தில் இருந்தார். ஒரு வேடுவனின் அம்பு கிருஷ்ணரின் காலில் குத்தப்பட்டதால் இறந்தார் என்று பாகவத புராணத்தின் மூலம் தெரியவருகிறது.
Remove ads
திரிவேணி சங்கமம்
பிரபாச பட்டினம் அருகே அமைந்த ஹிரண், சரஸ்வதி மற்றும் கபிலா என்ற மூன்று புனித ஆறுகள் சங்கமிக்கும் இடத்திற்கு திரிவேணி சங்கமம் என்று பெயர். சோமநாதரை வழிபடுவதற்கு முன் இத்திருவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடாடுவர்.
சமண சமயத்தின் 8வது தீர்த்தங்கரர் சந்திரபிரபாவின் கோயில் இங்கு அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads