பெங்களூர் ஊரக மாவட்டம்
கர்நாடகத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெங்களூர் புறநகர் மாவட்டம் அல்லது பெங்களூர் ஊரக மாவட்டம் என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 31 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று.[3] 1986-ஆம் ஆண்டில் அப்போதைய பெங்களூர் மாவட்டம் நகர, ஊரக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டபோது இம்மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் ஒசகோட்டே ஆகும்.

இம்மாவட்டத்தில் 1,713 மக்கள் வாழும் ஊர்களும், 177 மக்கள் அற்ற ஊர்களும், 9 நகரங்களும், 229 ஊர்ப் பஞ்சாயத்துக்களும் உள்ளன. 5,814 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் தெற்கில் மாண்டியா மாவட்டம், மைசூர் மாவட்டம், தமிழ் நாடு மாநிலம் ஆகியவற்றையும், கிழக்கில் கோலார் மாவட்டத்தையும், தமிழ் நாட்டினையும், மேற்கில் தும்கூர் மாவட்டம், மாண்டியா மாவட்டம் ஆகிய மாவட்டங்களையும், வடக்கில் தும்கூர் மாவட்டம், கோலார் மாவட்டம் ஆகியவற்றையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
Remove ads
மக்கள்தொகை பரம்பல்
2,298 சகிமீ பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 9,90,923 ஆகும். எழுத்தறிவு 77.93% ஆகும். இம்மாவட்டத்தில் கன்னடம், தெலுங்கு, தமிழ், ஆங்கிலம் பேசப்படுகிறது.
ஆட்சிப் பிரிவுகள்
இது நான்கு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[3] இவை தேவனஹள்ளி, தொட்டபள்ளாபுரம், ஒசகோட்டே, நெலமங்கலம் என்பன. மேலும் இம்மாவட்டம் 4 ஊராட்சி ஒன்றியங்களையும், 1051 வருவாய் கிராமங்களையும், 5 நகராட்சிகளையும், 18 காவல் நிலையங்களையும் கொண்டது.
அரசியல்
மாவட்டத்தின் சட்டமன்றத் தொகுதிகள்:[3]
- ஒசகோட்டே
- தேவனஹள்ளி
- தொட்டபள்ளாபுரா
- நெலமங்கலா
- மாகடி
- ராமநகரம்
- கனகபுரா
- சன்னபட்னா
போக்குவரத்து
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads