மணவாளக்குறிச்சி
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மங்கலகுறிச்சி (ஆங்கிலம்:Manavalakurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
Remove ads
அமைவிடம்
கன்னியாகுமரியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்த இப்பேரூராட்சிக்கு அருகே அமைந்த தொடருந்து நிலையம் 5 கி.மீ. தொலைவில் உள்ள இரணியலில் உள்ளது. இது நாகர்கோவிலுக்கு கிழக்கே 20 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
4.2 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 28 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3123 வீடுகளும், 10969 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 8.13°N 77.3°E ஆகும்.[7]
தொழில்கள்
இங்கு வசிப்பவர்களின் முக்கியத் தொழில்களாக மீன் பிடித்தல், விவசாயம், கயிறு திரித்தல் மற்றும் இவற்றிற்கான வணிகம் போன்றவை உள்ளன.
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads