மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மதுக்கூர் (ஆங்கிலம்:Madukkur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
Remove ads
அமைவிடம்
மதுக்கூர் பேரூராட்சிக்கு கிழக்கே முத்துப்பேட்டை 18 கி.மீ.; மேற்கே பட்டுக்கோட்டை 12 கி.மீ.; வடக்கே மல்லிப்பட்டினம் 35 கி.மீ.; தெற்கே மன்னார்குடி 22 கி.மீ. ஒரத்தநாடு 25 கி.மீ. உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
5 ச.கி.மீ. பரப்பும், 15அ வார்டுகளும், 32 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பட்டுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,007 வீடுகளும், 16,266 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10.48°N 79.4°E ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 3 மீட்டர் (9 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மதுக்கூரில் புகழ்பெற்றவர்கள்
- அத்தி கோ. இராமலிங்கம், பேச்சாளர், இலக்கியவாதி
- மரைக்காயர் - இவரது பெயர் முகமது யாக்கூப் மரைக்காயர். இலக்கியத்தில் உரையாடுவதில், அழகிய தமிழில் பேசுவதில் சிறந்தவர். மதுக்கூர் சுற்று வட்டாரம் முழுவதும் புகழ்பெற்றவர். இவரை 'மதுக்கூர் கம்பன்' என்று அழைத்து வந்தனர்.
- மதுக்கூர் மஜீத் - இவரது முழுப்பெயர் அப்துல் மஜீத். மதுக்கூர் சுற்று வட்டாரம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் தனது பழக்க வழக்கத்தால் பரிச்சயமானவர். இஸ்லாமிய பாடல்கள் சொந்தமாக தானே இயற்றி பாடி, பல மேடை கச்சேரிகள் செய்து வந்துள்ளார். சிங்கப்பூர் மலேசியாவிலும் கச்சேரிகள் செய்து வந்துள்ளார்.
- மதுக்கூர் கண்ணன் - அல்லிதந்த வானம் அன்னையல்லவா, சொல்லி தந்த பூமி தந்தையல்லவா..என்ற வரிகளை தமிழ் உலகிற்கு தந்தவர் தான் 'மதுக்கூர் கண்ணன்'. யார் திரைப்படத்தை இயக்கியதால்இவரை 'யார்கண்ணன்' என்றும் அழைக்கிறார்கள்.
- மதுக்கூர் இராமலிங்கம் - தமிழகம் முழுவதும் பல மேடைகளிலும் லியோனியுடன் சேர்ந்து பல பட்டிமன்றங்களில் பேசி இன்றும் இலக்கிய பணியில் வாழ்ந்து வருகிறார்.
Remove ads
வெளி இணைப்புகள்
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads