மலேர்கோட்லா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேர்கோட்லா (Malerkotla ), இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மலேர்கோட்லா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும் [1]. இது மாநிலத் தலைநகரான சண்டிருக்கு தென்மேற்கே 109 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனருகே லூதியானா 50 கிலோ மீட்டர் தொலைவிலும்; சங்குரூர் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31 வார்டுகளும், 25,218 குடியிருப்புகளும் கொண்ட மலர்கோட்லா நகரத்தின் மக்கள் தொகை 135,424 ஆகும். அதில் 71,376 ஆண்கள் மற்றும் 64,048 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12.44 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 897 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 69.10 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 6.57 % மற்றும் 0% வீதம் உள்ளனர். இந்நகரத்தில் சீக்கியர்கள் 9.50%, இந்து சமயத்தினர் 20.71%, இசுலாமியர் 68.50%, சமணர்கள் 1.11%, கிறித்தவர்கள் 0.13% மற்றும் பிற சமயத்தினர் 0.06%வீதம் உள்ளனர்[2]
Remove ads
போக்குவரத்து
தொடருந்து நிலையம்

மலேர்கோட்லா நகர தொடருந்து நிலையம்[3] தில்லி-அம்பாலா-லூதியானா செல்லும் இருப்புப்பாதையில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads