மலையாங்குளம் ஊராட்சி

இது தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது From Wikipedia, the free encyclopedia

Remove ads

மலையாங்குளம் ஊராட்சி (Malayankulam Gram Panchayat), தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்கும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.[6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2286 ஆகும். இவர்களில் பெண்கள் 1137 பேரும் ஆண்கள் 1149 பேரும் உள்ளனர்.

Remove ads

அடிப்படை வசதிகள்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]

மேலதிகத் தகவல்கள் அடிப்படை வசதிகள், எண்ணிக்கை ...
Remove ads

சிற்றூர்கள்

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:

  1. மலையாங்குளம் தெற்கு
  2. மலையாங்குளம் வடக்கு
  3. அம்பேத்கர் நகர்
  4. காட்டுக்கொல்லை
  5. நரியம்புதூர்
  6. நரியம்பாக்கம்

வரலாறு

மலையாங்குளம் 12ம் நூற்றாண்டில், இந்த ஊரின் பெயர், மலையரண் களத்துார் என பெயர் பெற்று சதுர்வேதிமங்கலமாக இருந்துள்ளது.இது நாளடைவில் மருவி, மலையாங்குளம் என தற்போது அழைக்கப்பட்டு வருகிறது.இந்த ஊரில் மிகப்பெரிய சிவன் கோவில் இருந்துள்ளது என்பதும், அது அழிந்து மூலவர் மட்டும் எஞ்சி நின்று தற்போது சிறிய கோவிலாக உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

கோயில்

மலையாங்குளம் குமரேஸ்வரர் கோயில்

சுற்றுலா

23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

அமைவிடம்

மலையாங்குளம் வடக்கே காஞ்சிபுரம் 25 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் 28 கி.மீ. தொலைவில் உள்ள செங்கல்பட்டு சந்திப்பு தொடருந்து நிலையம் ஆகும். மலையாங்குளத்தில் இருந்து 60 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையமாகும்

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads