உத்திரமேரூர்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

உத்திரமேரூர்
Remove ads

உத்திரமேரூர், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தின், உத்திரமேரூர் வட்டம் மற்றும் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இப்பேரூராட்சிப் பகுதியில் பல தொன்மையான கோயில்கள் மற்றும் சோழர்கள் காலத்திய குடவோலை தேர்தல் முறைகள் பற்றி விளக்கும் உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளது. உத்திரமேரூர் நகரம் முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. உத்தரமேரூர் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[2]

விரைவான உண்மைகள் உத்திரமேரூர் உத்திரமநல்லூர், நாடு ...
Remove ads

அமைவிடம்

போளூர் - சேத்துப்பட்டு - வந்தவாசி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. உத்திரமேரூருக்கு வடக்கே காஞ்சிபுரம் 28 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் அமைந்த தொடருந்து நிலையம் 26 கி.மீ. தொலைவில் உள்ள செங்கல்பட்டு ஆகும். இதன் மேற்கில் வந்தவாசி25 கி.மீ. மற்றும் ஆரணி 69 கி.மீ. தொலைவிலும், செய்யார் 32கி.மீ தொலைவிலும், தெற்கில் மதுராந்தகம் 26 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

4.4 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 149 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி உத்திரமேரூர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,197 வீடுகளும், 25,194 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 81.74% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1004 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]

கோயில்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads