மேற்படிக்குறி (தமிழ் நடை)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற தமிழ் நடையைக் கையாளல் வேண்டும். மொழி நடை என்பது ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறையைக் குறிக்கும். இத்தகைய நெறிமுறையில் நிறுத்தக்குறிகள் (punctuation marks) பெரும் பங்கு வகிக்கின்றன. பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும்.

விரைவான உண்மைகள் ‌〃, மேற்படிக்குறி (தமிழ் நடை) ...

நிறுத்தக்குறிகளுள் ஒன்று மேற்படிக்குறி (ditto mark) ஆகும். இது ஒருமுறை கூறப்பட்ட பொருளை மீண்டும் ஒருமுறையோ பலமுறைகளோ அப்படியே எடுத்துரைக்கும் தேவையைத் தவிர்த்து, அதை ஓர் அடையாளத்தால் வெளிப்படுத்த உதவுகின்றது.[1][2]

Remove ads

மேற்படிக்குறி (")

மேலே குறிப்பிட்டதுபோல என்னும் பொருளில் மேற்படிக்குறி பயன்படுகிறது.

எடுத்துக்காட்டு:
மிளகு ஒரு கிலோ .....ரூ. 30
அரிசி        ..... ரூ. 40

(இந்த எடுத்துக்காட்டில், மிளகும் ஒரு கிலோ, அரிசியும் ஒரு கிலோ என்பது குறிக்கப்படுகிறது).

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads