மோகனூர் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மோகனூர் தொடருந்து நிலையம் (Mohanur Junction railway station, நிலையக் குறியீடு:MONR)[1] ஆனது இந்தியாவின், தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டத்தில், மோகனூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[2] இது கரூர் - சேலம் சந்திப்புக்கு இடையில் புதியதாக 2013 மே மாதம் முதல் செயல்படத் தொடங்கியது. இது இந்திய இரயில்வே துறையின், தென்னக இரயில்வே மண்டலத்தில், சேலம் கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.
Remove ads
முக்கிய தொடருந்துகள்
- சென்னை சென்ட்ரல் - பாலக்காடு (பழனி விரைவுத் தொடருந்து)
- சேலம் - கரூர் பயணிகள் தொடருந்து
- சேலம் - திருச்சிராப்பள்ளி பயணிகள் தொடருந்து
பேருந்து வசதிகள்
பாலக்காடு விரைவுத் தொடருந்து வருகையின் போது பேருந்து நிலையத்திலிருந்து, தொடருந்து நிலையம் வரையும் மற்றும் தொடருந்து நிலையத்திலிருந்து, பேருந்து நிலையம் வரை, பேருந்து வசதியை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads