ரத்லம் இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரத்லம் இராச்சியம் (Ratlam State)[1] இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால மத்தியப் பிர்தேச மாநிலத்தின் ரத்லம் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இரத்லாம் இராச்சியம் 2336 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 83,773 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இந்திய விடுதலைக்குப் பின்னர், 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப் படி 15 சூன் 1948 அன்று இரத்லம் இராச்சியம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. தற்போது இந்த இராச்சியத்தின் பகுதிகள் மத்தியப் பிரதேசத்தின் மால்வா பகுதியில் உள்ள ரத்லம் மாவட்டத்தில் உள்ளது.



Remove ads
வரலாறு
மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த இரத்லம் இராச்சியம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற இரத்லம் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பம்பாய் மாகாணத்தின் மால்வா முகமையின் கீழ் செயல்பட்டது. இரத்லம் இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 13 துப்பாக்கிக் குண்டுகள் முழங்கி மரியாதை செய்தனர்.
இது பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்தின் சூரத் முகமையின் கீழ் இருந்தது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்பட்டது. 1956-இல் மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, 15 சூன் 1948 அன்று இரத்லம் இராச்சியத்தின் பகுதிகள் மத்தியப் பிரதேச மாநிலத்தின் மால்வா பகுதியில் உள்ள ரத்லம் மாவட்டத்தில் உள்ளது.
ஆட்சியாளர்கள்
இரத்லம் இராச்சியத்தின் ஆட்சியாளர்கள் இராஜபுத்திர குலத்தின் ரத்தோர் வம்சத்தினர் ஆவார்.[1][2]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads