ரெட்டியார்
ஒரு சாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரெட்டியார் (Reddiar) எனப்படுவோர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் தமிழகம், புதுச்சேரி மற்றும் இலங்கையில் நில உடைமைகளும், விவசாயம் மற்றும் வணிகம் செய்பவர்களாகவும் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் வன்னியர்களும் ரெட்டியார் என்ற பட்டத்துடன் அழைக்கப்படுகின்றனர்.[1][2][3]
ரெட்டியார்கள், ஆந்திர பிரதேசத்தில் இருந்து சாகுபடிக்கு வளமான மண்ணைத் தேடி, விசயநகர பேரரசின் போது புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் குடியேறினர்.
Remove ads
தோற்றம்
ரெட்டி வம்சத்தைச் சேர்ந்த அனவோட ரெட்டி (கி.பி. 1335-1364) வடக்கே ராஜமுந்திரி, தெற்கே காஞ்சி மற்றும் மேற்கே ஸ்ரீசைலம் வரை தன் இராஜ்ஜியத்தின் ஆதிக்கத்தை விரிவுபடுத்தினார். வள்ளியூரில் நடந்த போரில், ரெட்டியபுரம் படை 14 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் படையை தோற்கடித்தது. வள்ளியூர் முருகன் கோயிலின் நுழைவாயிலில் உள்ள ஒரு தகவல் பலகையில், 14 ஆம் நூற்றாண்டு வள்ளியூர் போர் - ரெட்டியபுரம் படை வள்ளியூர் போரில் திருவிதாங்கூர் படையை தோற்கடித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் போருக்குப் பிறகு ரெட்டியார்கள் 14 ஆம் நூற்றாண்டில் சமுகரங்கபுரம், சீலாத்திகுளம் மற்றும் திருநெல்வேலி பகுதி முழுவதும் குடியேறினர்.
Remove ads
பிரிவுகளும் கோத்திரங்களும்
திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்த ரெட்டியார் சாதியினரிடம் பல உட்பிரிவுகள் உள்ளன. இவர்களிடம் பல கோத்திரங்களும் இருக்கின்றன. அதுகுறித்த அட்டவணை இது. [4]
Remove ads
குறிப்பிடத்தக்க நபர்கள்
- ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சென்னை மாகாண முதல்வர் (1947-1949)
- சாத்தூர் ராமச்சந்திரன் முன்னாள் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
- கே. என். நேரு தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
- துரைசாமி நெப்போலியன் திரைப்பட நடிகர் மற்றும் முன்னாள் நடுவண் இணையமைச்சர்
- வி. வைத்தியலிங்கம் முன்னாள் புதுவை முதல்வர்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads