வாக்காப் பாரு தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

வாக்காப் பாரு தொடருந்து நிலையம்
Remove ads

வாக்காப் பாரு தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Wakaf Bharu Railway Station மலாய்: Stesen Keretapi Wakaf Bharu) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், கிளாந்தான் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் தும்பாட் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் வாக்காப் பாரு மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.[1]

விரைவான உண்மைகள் வாக்காப் பாரு, பொது தகவல்கள் ...

கிளாந்தான் மாநிலத் தலைநகர் கோத்தா பாரு நகரத்தில் இருந்து 13 கி.மீ. தொலைவில் மிக அருகாமையில் உள்ளது. அத்துடன் மலேசியக் கிழக்கு கடற்கரை தொடருந்து சேவையின் (KTM East Coast Railway Line) வடக்கு இறுதி முனையில் உள்ள தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும்.

Remove ads

பொது

இந்த நிலையம் கேடிஎம் இண்டர்சிட்டி (KTM Intercity) தொடருந்து சேவையை வழங்குகிறது. வாக்காப் பாரு நகரத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், வாக்காப் பாரு நகரத்தின் பெயரில் இந்த நிலையம் அழைக்கப்படுகிறது. இந்த நிலையம் இப்போது பெரும்பாலும் மலாயர்களின் பண்டிகை விடுமுறை நாட்களில் மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.[2]

வாக்காப் பாரு தொடருந்து நிலையம் ஒரு சிறிய நிலையமாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திசையில் இருந்தும் 4 தொடருந்துகளுக்குச் சேவை செய்கிறது. மலேசியா ஒரு பிரித்தானிய காலனியாக இருந்தபோது 1948-ஆம் ஆண்டில் இந்தத் தொடருந்து நிலையம் திறக்கப்பட்டது.

ஜொகூர் பாருவில் இருந்து ஒவ்வொரு நாளும் பயணிக்கும் ஒற்றைத் தொடருந்து சேவையின் வருகை, இந்த நிலையத்தில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.[3]

Remove ads

தொடருந்து சேவைகள்

காட்சியகம்

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads