வெட்டூர்ணிமடம்
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
வெட்டூர்ணிமடம் (ஆங்கிலம்: Vetturnimadam) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3]
கடல் மட்டத்திலிருந்து சுமார் மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வெட்டூர்ணிமடம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 8.190000°N 77.421100°E (அதாவது, 8°11'24.0"N, 77°25'16.0"E) ஆகும். நாகர்கோவில், கோட்டாறு, வடசேரி, பார்வதிபுரம் மற்றும் கிருஷ்ணன்கோவில் ஆகியவை வெட்டூர்ணிமடம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
நாகர்கோவில் நகரத் தொடருந்து நிலையம், வெட்டூர்ணிமடத்திலிருந்து சுமார் 1.7 கி.மீ. தூரத்தில் அமையப் பெற்று, இவ்வூருக்கும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளுக்கும் பலனளிக்கிறது.
இரட்சணிய சேனை மேல்நிலைப் பள்ளி, வெட்டூர்ணிமடம் பகுதியில் அமைந்துள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக, கலை மற்றும் அறிவியல் கல்லூரியான, பயோனியர் குமாரசாமி கல்லூரி வெட்டூர்ணிமடத்தில் அமைந்துள்ளது.[4]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads