வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia

Remove ads

வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.

வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பதினெட்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. மணப்பாறை வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வையம்பட்டியில் இயங்குகிறது. இவ்வூர் சோழ நாட்டில் காவிரி தென்கரையில் அமைந்துள்ளது. இவ்வூரின் பெயரை அக்காலத்தில் மக்கள் விலம்பட்டி என்று அழைத்து வந்தனர் பின்பு இது வில் அம்பு பட்டி என்ற பெயர் காலப்போக்கில் வையம்பட்டி என்று மாற்றமடைந்து விட்டது வையம்பட்டி அருகே உள்ள கருங்குளம் என்னும் ஊரில் ஜல்லிக்கட்டு வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாகக் கருதப்படுவது பொன்னியாறு அணைக்கட்டு ஊர் சென்னையில் இருந்து தேனி செல்லும் வழியில் இடையில் அமைந்துள்ளது வாரந்தோறும் சனிக்கிழமை ஒரு சந்தை வியாபாரம் நடக்கும் மேலும் வியாழக்கிழமை ஆடுகள் விற்பனை சந்தையும் ஞாயிற்றுக்கிழமை கோழி விற்கும் சந்தையும் நடைபெறும்.

Remove ads

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 96,463 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 14,956 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 10 ஆக உள்ளது. [4]

ஊராட்சி மன்றங்கள்

வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினெட்டு கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[5]

  1. அணியாப்பூர்
  2. அமையபுரம்
  3. அயன்ரெட்டியபட்டி
  4. இனாம்புதுவாடி
  5. இனாம்புதூர்
  6. இனாம்பொன்னம்பலம்பட்டி
  7. எளமணம்
  8. குமாரவாடி
  9. செக்கணம்
  10. தவளவீரன்பட்டி
  11. நடுபட்டி
  12. நல்லாம்பிள்ளை
  13. பழையகோட்டை
  14. புதுக்கோட்டை
  15. முகவனூர்
  16. வி. பெரியபட்டி
  17. வெள்ளாளப்பட்டி
  18. வையம்பட்டி

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads