2020 பெத்திரீனியா நிலநடுக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2020 கொரோவாசிய நிலநடுக்கம் (2020 Croatia earthquake) அல்லது பெத்திரீனியா நிலநடுக்கம் (Petrinja earthquake) 2020 திசம்பர் 29 அன்று கிட்டத்தட்ட பிப 12:20 ம.ஐ.நே (11:20 ஒ.ச.நே) குரோவாசியாவின் சிசாக்-மொசுலாவினா மாவட்டத்தில் இடம்பெற்ற 6.4 Mw (6.2 ML) அளவு நிலநடுக்கம் ஆகும். இதன் நிலநடுக்க மையம் பெத்ரீனியா நகரில் இருந்து 3 கிமீ (1.8 மைல்) மேற்கு-தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டிருந்தது.[1] இதன் ஆகக்கூடிய செறிவு ஐரோப்பிய நுண்புவியலைவு அளவுகோளில் VIII (பெரும் பாதிப்பு) முதல் IX (நாசம்) ஆகக் கணக்கிடப்பட்டது.[2][3] இந்நிகழ்விற்கு முன்னதாக முந்தைய நாளில் மூன்று முன்னதிர்வுகள் ஆகக்கூடியது 5.2 Mw அளவில் இடம்பெற்றிருந்தது.[4] இந்த நிலநடுக்கத்தின் பின்னர் 4.8 Mw வரையான பல பின்னதிர்வுகள் இடம்பெற்றன.[3]
இந்நிலநடுக்கத்தினால் ஏழு பேர் உயிரிழந்ததாகவும், 26 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. பெத்ரீனியா நகரில் பல கட்டடங்கள் முற்றாக இடிந்து வீழ்ந்தன.[5] நகரின் அரைவாசிப் பகுதி சேதமடைந்ததாக நகர முதல்வர் தாரிங்கோ தும்போவிச் அறிவித்தார்.[6][7][8][9]
இந்நிலநடுக்கத்தின் தாக்கம் வடக்கு குரோவாசியா, மற்றும் அயல் நாடுகளான சுலோவீனியா, ஆஸ்திரியா, பொசுனியா எர்செகோவினா, செர்பியா, அங்கேரி, சிலோவாக்கியா, இத்தாலி ஆகியவற்றின் பல பகுதிகளிலும், அத்துடன் மொண்டெனேகுரோ, ஜெர்மனி, செக் குடியரசு வரை உணரப்பட்டது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads